Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிப்போம் அண்ணாமலை ஆவேசம்…

Oredesam by Oredesam
April 19, 2022
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
FacebookTwitterWhatsappTelegram

நம் தேசிய தலைவர் திரு ஜேபி நட்டாஜி அவர்கள, நாட்டின் வளர்ச்சி குறித்தும், வருங்கால சமுதாயம் குறித்தும், ஆழ்ந்த அக்கறையுடன் வெளியிட்டுள்ள இந்தக் கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரும் பயன் அடையும் வகையில், இக்கடிதத்தை நான் தமிழில் மொழிமாற்றி உங்களுக்காக அனுப்பியுள்ளேன். கவனமாகப் படியுங்கள். இனி நம் தேசிய தலைவர், உங்களுடன்…நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சிப் பாதை ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

2047ஆம் ஆண்டு நாம் 100வது சுதந்திர தினம் கொண்டாடும் பொழுது இந்த நாடு எப்படிப் பட்ட வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டும் என்று நாம் முன்னோக்கிச் சிந்தித்துத் திட்டமிட வேண்டும்.இன்று உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. 135 கோடி மக்கள் வாழும் நாடு கொரோனா பெருந்தொற்றின் போது மிகவும் பாதிக்கப்படும் என நம்பியதற்கு மாறாக அதை கட்டுப்படுத்தி இவ்வுலகிற்கே மருந்தகமாக மாறியது. நம் நாட்டின் பொருளாதாரம் வெளிப்படைத் தன்மை வாய்ந்தது. சமீபத்தில் நடந்த சீர்திருத்தங்கள் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது. அதே சமயத்தில், நாட்டின் வறுமை நிலையும் அதிவேகமாகக் குறையத் துவங்கியதை நம்மால் காண முடிகிறது.கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

READ ALSO

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

வாக்கு வங்கி அரசியல், பிரிவினைவாத அரசியல், ஒரு சார் அரசியல் என்ற பழைய துருப்பிடித்த அரசியல் உத்திகள் இனி வேலைக்காவாது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு “அனைவரும் ஒன்றிணைத்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் உழைப்பு” என்கிற கோட்பாட்டின் மூலம் இந்திய மக்களை உத்வேகப்படுத்தி அவர்கள் சிறகடித்துப் பறக்க ஒரு புதிய பாதையை வழங்கியுள்ளார். துரதிருஷ்டவசமாக, மக்களின் தொடர் நிராகரிப்பால் மனமுடைந்த எதிர்க் கட்சிகள் இந்த வளர்ச்சி அரசியலை எதிர்த்து, மீண்டும் வாக்கு வங்கி மற்றும் பிரிவினைவாத அரசியலில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இன்றைக்கு, இந்தியா இரண்டு தனித்துவமான அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது; தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்கள் பணியில் ஒருவிதமும் எதிர் அணியில் பல கட்சிகளின் அற்ப அரசியிலும் அவர்கள் உமிக்கும் கடும் வார்த்தைகளிலும் மறுவிதத்தையும் காணலாம். கடந்த சில தினங்களாக இந்த கட்சிகள் எல்லாம் எழுத்து வடிவில் ஒன்று சேர்ந்து (நிஜத்தில் ஒன்று சேர்வார்களா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்), நம் தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக நேரடி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அது மட்டுமின்றி கடினமாக உழைக்கும் நம் குடிமக்கள் மீது அவதூறு விளைக்கிறார்கள்.மக்களால் நிராகரிக்கப்பட்ட மனமுடைந்த கட்சிகளுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் – வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் நீங்கள், ராஜஸ்தானில் உள்ள கரோலில் நிகழ்ந்த இழிவான நிகழ்வுகளை மறந்துவிட்டீர்களா? எந்த நிர்ப்பந்தத்தால் இப்படி அமைதியாக உள்ளீர்கள் ?நவம்பர் 1966 ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இந்தியாவில் பசுவதை தடை சட்டம் கோரி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் செய்த இந்து சாதுக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

ராஜீவ்காந்தியின் இந்த பிரபலமான வார்த்தைகளை யாரால் மறக்க முடியும் “ ஒரு பெரிய மரம் விழும்போது பூமி அதிரும்” இந்திரா காந்தியின் இறப்பிற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்துகிறது இந்த வார்த்தைகள்.1969 குஜராத், 1980 மொராதாபாத், 1984 பிவண்டி, 1987 மீருட், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980 லிருந்து இந்துக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்கள், 1989 இல் பாகல்பூர், 1994 இல் ஹூப்ளி.. காங்கிரஸ் ஆட்சியின் போது நிகழ்ந்த மதக்கலவரங்களின் பட்டியல் மிக நீண்டது. 2013 இல் நடந்த முசாபர்நகர் கலவரம் அல்லது 2012 இல் அசாமில் நிகழ்ந்த கலவரம் எல்லாம் யார் ஆட்சியில் நிகழ்ந்தது?அனைவருக்கும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைக் கட்டுப்படுத்திய தேசிய ஆலோசனைக் குழு மிகவும் மோசமான வகுப்புவாத வன்முறை சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

வாக்கு வங்கி அரசியலின் அடிமட்டத்தைத் தொட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி. (Targeted Communal Violence Bill) அதேபோல, மிகவும் கொடூரமான முறையில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இனப்படுகொலைகள் செய்யப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். அம்பேத்கரைப் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி பெற வைத்ததும் இதே காங்கிரஸ் கட்சி தான்.தமிழ்நாட்டில், ஆளுகின்ற கட்சி யுடன் இணக்கமான சிலர் இந்தியாவின் தலைசிறந்த இசை அமைப்பாளரை அவர்களுக்கு சாதகமான கருத்தைத் தெரிவிக்காததால் வார்த்தைகளால் தாக்கி, துன்புறுத்தி அவமானப்படுத்துகிறார்கள். இது தான் ஜனநாயகமா? அவரது கருத்தை ஒரு கருத்தாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல் கடும் சொற்களால் ஏன் துன்புறுத்த வேண்டும்?மிகவும் கேவலமான அரசியல் வன்முறை மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நிகழ்ந்து வருகிறது, தொடர்ச்சியாக பாஜக நிர்வாகிகள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.

மற்ற கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மகாராஷ்டிராவில் இரண்டு மந்திரிகள் ஊழல், பணம் பறித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுதல் என்ற குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மாநிலத்தின் இரண்டு மந்திரிகள் மிரட்டி பணம் பறிக்கும் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்பது நாட்டிற்கு எப்பேர்ப்பட்ட தலைகுனிவு. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், இந்த அரசியல் கட்சிகளின் வெட்கக்கேடான நடத்தையின் சான்று. இவர்களில் வாக்கு வங்கி சாயம் வெளுக்க துவங்கியதால் பயத்தில் உள்ளார்கள். பல ஆண்டுகளாக, அவர்கள் வளர்த்த தேச விரோத அமைப்புகள், மக்களை கொடுமைப்படுத்திய அமைப்புகள், இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சிகள் பயத்தில் மூழ்கியிருப்பதால் இப்படி மக்கள் விரோதமாகச் செயல்படத் துவங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வாக்கு வங்கி அரசியலை நம்பி இருப்பவர்களுக்குக் கண் திறப்பாக அமைந்திருக்கும். இந்திய நாட்டின் மிகப் பெரிய மாநிலம், மேற்கில் உள்ள ஒரு கடலோர மாநிலம், ஒரு வடகிழக்கு மாநிலம் மற்றும் மலைப் பிரதேசம் பாஜகவிற்கு உறுதியான வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். பாஜகவால் தான் இன்று இந்திய மக்களின் உணர்வு அரசாங்கத்தின் சார்பாக உள்ளது, வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த மகத்தான வெகுமதி.ராஜ்யசபாவில் 100 இடங்களைப் பிடித்த ஒரே கட்சி என்ற பெருமை பாஜகவிற்குக் கிடைத்துள்ளது மற்றும் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது பாஜக. நாட்டை இவ்வளவு ஆண்டுகள் ஆட்சி செய்தும் வரலாற்றின் விளிம்பில் ஏன் தத்தளித்து கொண்டிருக்கிறோம் என்று எதிர் காட்சிகள் தங்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய இளைஞர்கள் எதிர்பார்ப்பது வாய்ப்புகள், தடைகள் அல்ல. அவர்களுக்கு முன்னேற்றமே தேவை, பிரிவினை அல்ல. இன்று அனைத்து தரப்பட்ட மக்களும், அனைத்து வயது வகுப்பினரும் ஒன்று சேர்ந்து ஏழ்மையைத் தோற்கடித்து இந்திய நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல ஒன்று சேர்ந்துள்ளார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் வளர்ச்சி அரசியலைத் தழுவ வேண்டும். இதை நாம் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளோம்.நமது தேசிய தலைவரின் கடிதத்தின் வாயிலாக, நமது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைத் தெளிவாகியுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
அரசியல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

October 4, 2023
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
அரசியல்

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை! விளம்பரங்களுக்கு பணம் உள்ளதாம் ‘: திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை! விளம்பரங்களுக்கு பணம் உள்ளதாம் ‘: திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

August 21, 2021
சென்னையில் 2500 கோடி ரூபாய் செலவில் பூங்கா! ஆனால் பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லையாம்! திமுக அரசிற்கு அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்

சென்னையில் 2500 கோடி ரூபாய் செலவில் பூங்கா! ஆனால் பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லையாம்! திமுக அரசிற்கு அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்

July 5, 2021
OREDESAM TEJAS

கோவையில் பறந்த தேஜாஸ் போர் விமானம்! அதிரடிக்கு தாயராகும் மோடியின் புதிய இந்தியா!

October 18, 2021
542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

May 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x