Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர் மத பிரச்சாரத்திற்கு வந்தவர்களுடன் தொடர்பு! உண்மையை மறைத்த அதிர்ச்சி சம்பவம் !

Oredesam by Oredesam
March 25, 2020
in செய்திகள், தமிழகம்
0
கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸிற்கு தமிழகத்தில் நேற்று ஒருவர் முதல் பலியாணர். இவர் வெளிநாட்டவர் தொடர்பு காரணமாகவே கொரோனா வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.கொரோனா தொற்று இருப்பதாகத் தமிழகத்தில் இதுவரையிலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.இறந்தவரின் வயது 54. இவருக்கு ஏற்கெனவே நீரழிவுப் பிரச்சினை இருந்திருக்கிறது. மேலும், நுரையீரல் (சுவாசப்) பிரச்சினையும் இருந்திருக்கிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

மதுரையைச் சேர்ந்த இவருக்கு இரு மனைவிகள், குடும்பங்கள். நிலம், வீடு விற்பனைத் தொழில் செய்துவந்த இவர், மதப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வார், பிரச்சாரமும் செய்வார் எனக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இவர், தமக்கு எந்த விதத்திலும் அயல்நாட்டவர் தொடர்பு இல்லை என்றே தெரிவித்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்தே, முற்றிலும் வெளிநாட்டுத் தொடர்புகள் அற்ற ஒருவருக்கு கரோனா பாதிப்பு நேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது மிகவும் அபாயமான சூழல். என தமிழகம் அச்சமடைந்தது

அரசுத் தரப்பில் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கு இருந்த தொடர்புகள் அறியப்பட்டன.தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் தங்கியிருந்த சிலரை இவர் சந்தித்திருக்கிறார். அல்லது அவர்கள் மதுரைக்கு வந்து இவரைச் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து குழுவினர் அனைவருமே தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் இருவருக்குத் தொற்று இருப்பதாக அறியப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் உயிரிழந்தவர், கடந்த வாரத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.நீரழிவுப் பிரச்சினை இருக்கும் நிலையில், தொடக்கத்தில் நிமோனியா காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் பிறகு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், சிகிச்சையால் எவ்விதப் பலனும் இல்லை. அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் (மதுரையில் ஏற்கெனவே கரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுவிட்டார்).

தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அப்போதே அவருடைய உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.இதைத் தொடர்ந்துதான், இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றித் திங்கள்கிழமை பத்திரிகையாளர்களிடம் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.தொடர்ந்து, சிகிச்சை அளித்து வந்தபோதிலும் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவேதான், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிவாக்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எனினும், இரவு 12.20 மணியளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இரவு 2 மணிக்கு இந்த மரணத்தை அதிகாரபூர்வமாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.இதனிடையே, இறந்தவருடைய இரு குடும்பங்களும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர் யார் யாரையெல்லாம் சந்தித்தார், சந்தித்திருப்பார் எனப் பட்டியலிட்டு அவர்களையும் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒற்றை நபர் கவனக் குறைவாக அல்லது அலட்சியமாக நடந்துகொண்டதால் தற்போது அவருடைய இரு குடும்பங்களும் அவர் சம்பந்தப்பட்ட பலரும் சிக்கலில் இருக்கின்றனர். இவர்கள் யார் எவர் என்பதைக்கூட உறுதி செய்வது எளிதல்ல. இவர்களில் யாருக்கேனும் கரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமோ என்ற அச்சம் இருப்பதுடன், இவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்படவும் வேண்டியிருக்கிறது.

எனவே, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருப்போம். தேவையில்லாமல் யாரையும் சந்திப்பதைத் தவிர்ப்போம். கரோனா தொற்று சங்கிலி தொடராமல் அறுப்போம்.

நன்றி: தினமணி

Share177TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தேசத்தை நாசமாக்கத் துடிக்கும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்.

தேசத்தை நாசமாக்கத் துடிக்கும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்.

July 21, 2025
மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

March 23, 2022
கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

December 5, 2021
திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்தை தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்தை தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு

March 25, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x