ஐபிஎல் 13வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக நடைபெறு வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி துபாய் இன்டர்னேஸ்னர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் இரு அணிகளும் தங்களின் இரண்டாவது வெற்றிக்கு பேராடும்.
இந்நிலையில் முதலில் களம் இறங்கிய பெங்களுரு அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். பின்ச் 52 ரன்களும் படிக்கல் 54 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்த டிவில்லியர்ஸ் கடைசி ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 201/3 ரன்கள் குவித்தது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















