இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் திமிர் காட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்?

A government bus driver who showed arrogance to a female passenger

A government bus driver who showed arrogance to a female passenger

கூடலூர் பகுதியில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன் கொல்லிக்கு செல்லும் அரசுப் பேருந்தை பேருந்து நிறுத்த்தில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் நிறுத்த முயற்சித்துள்ளார். பெண் பயணி கை காண்பித்தும் பேருந்து நிற்காமல் சென்றதால் அந்த பயணியால் பேருந்தில் ஏற முடியவில்லை.

சம்பந்தப்பட்ட அந்தப்பேருந்து, அடுத்த நிறுத்தமான அய்யன்கொள்ளியில் நின்றுள்ளது. இதற்கிடையே அங்கிருந்த ஜீப்பைப்பிடித்து பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண்மணி, பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். “கைக்குழந்தையோடு 4 மணி நேரமாக காத்திருக்கிறேன். கையைக்காட்டியும் வண்டியை ஏன் நிறுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு மிகக்கடுமையாக பதிலளித்த அவர், “நீங்க கையை எல்லாம் காட்டவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் “இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” என்று கேள்வி எழுப்பி கடுமையாக நடந்துள்ளார். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், சம்மந்தப்பட்ட ஓட்டுநர் மிது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.மேலும் உதயநிதி பேசிய பிறகு இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்பன் வீட்டு காசா என பேசிய உதயநிதியின் திமிர் பேச்சு தான் இதற்கு காரணம் றன நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Exit mobile version