தமிழகத்தில் களமிறங்கியது அமுல்! விற்பனைக்கு வருகிறது பால்! மக்கள் பெரும் எதிர்பார்ப்பு! ஆவினுக்கு சிக்கல்!

Amul Vs aavin

Amul Vs aavin

குஜராத் மாநிலத்தை தலைமையகமாகக் கொண்ட, குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது. இதன் சுவைகாரணமாக இந்தியாவில் பிரபலமான பிராண்டாக அமுல் விளங்குகிறது. ‘டேஸ்ட் ஆப் இந்தியா’ என போற்றப்படுகிறது. அமுல் வட மாநிலங்களை தாண்டி அனைத்து மாநிலங்களிலும் அமுல் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக வெளிநாடு அதுவும் அமெரிக்காவில் பால் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது அமுல் நிறுவனம்.

தற்போது ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர் விற்பனையில் இறங்கியுள்ள அமுல் நிறுவனம், இரண்டு மாதங்களில், பால் விற்பனையை துவக்க திட்டமிட்டு உள்ளது.தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் வாயிலாகவும், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பனீர் உள்ளிட்ட பொருட்களை, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள், 2023ல் துவங்கின. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமுல் நிறுவனம் பால் விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனால், பால் கொள்முதலை அமுல் நிறுவனம் துவங்கவில்லை. ஆனாலும், கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் நிறுவனம் மீண்டும் மும்முரம் காட்ட துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், ‘டீலர்’கள் வாயிலாக துவங்கியுள்ளது. இதற்கான கிடங்கு, செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது.

இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகும் நிலையில், அமுல் தரமானதாகவும் சற்று விலை குறைவாகவும் வர இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

ஆவின் நிறுவனம் தற்போது கொழுப்புசத்து குறைக்கப்பட்டும் விலை அதிகமாகவும் இருப்பதால் அமுல் வரவால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இதனால் ஆவின் விற்பனை முடங்கும் வாய்ப்புள்ளது.

Exit mobile version