அண்ணாமலை வெளியிட்ட DMK பைல்ஸ்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் 5 நாள் வருமான வரித்துறை ரெய்டு.. விழிபிதுங்கும் தி.மு.க

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.50,200 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஜெகத்ரட்சகனின் சொத்துகள் குறித்த பேச்சு அடிக்கடி அடிபட்டு வந்த நிலையில், வருமான வரி சோதனை வளையத்துக்குள் அவர் கொண்டுவரப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடந்த சோதனை,முடிவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளார்கள். மேலும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அவருடைய இல்லத்தில் 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றினர்.

ஏற்கனவே கடந்த 2020 ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் வருமான வரி துறையினர் மீண்டும் அதிரடி சோதனையை ஆரம்பித்தது. ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி என அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தனர்.

ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஐந்தாவது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்தது.

குறிப்பாக, சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது, அடையாறு வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்:
சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையின் போது, வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை எடுத்து சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்.

பின்னர், அவற்றை மிகப் பெரிய டிரங் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர்.கடந்த 5 நாட்களாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை, தற்போது முடிவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ்சில் உள்ள திமுகவினர் தற்போது பயத்தில் உள்ளார்கள் என்று அறிவாலய வட்டரங்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version