மத்திய அரசு பற்றி தவறாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடிக்கு தரமான பதிலடி கொடுத்த அண்ணாமலை !

‘தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் நான்கு ஆண்டுகளில் மட்டும் 6664 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது’ என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை:தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பா.ஜ.வின் கடமை.தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார்; உண்மை தான்!அது இன்று மட்டுமல்ல; 1967க்கு பின்பு மட்டுமல்ல; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலில் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர் நம் முன்னோர்.

மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தின் கல்வித் துவக்கம் என்று நம்பும் சிலரின் கவனத்திற்காக சொல்கிறேன்…கடந்த 1800ம் ஆண்டின் துவக்க காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே தமிழகத்தின் அனைத்து சமூக மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது.ஆனால் இன்றோ தமிழகத்தில் இன்ஜினியரிங் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அண்ணா பல்கலையில் 2016ல் 1.65 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 2020ல் 85 ஆயிரத்து 747 ஆக குறைந்து விட்டது.மேலும் 2021ல் நடந்த அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தன.கடந்த 15 ஆண்டுகளாக தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் நுழைவோர் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

தன் உரையை முடிக்கும் போது அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் ‘சமகிர சிக் ஷா’ நிதி வாயிலாக நான்கு ஆண்டுகளில் மட்டும் 6664 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2015 முதல் 2021 வரை தமிழகத்தில் 3.96 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Exit mobile version