Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?

Oredesam by Oredesam
October 31, 2020
in இந்தியா, செய்திகள்
0
அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?
FacebookTwitterWhatsappTelegram

2011ல் ஐபிஎஸ் அதிகாரியாகி எட்டு வருடங்களிலே தன்னுடைய பதவியை துறக்க அண்ணாமலை அவர்களுக்கு எப்படி ம னது வந்தது? அப்படி என்ன அவருக்கு போலீஸ் வேலை மீது வெறுப்பு? கம்பீரமா ன காக்கி உடையை தியாகம் செய்து வி ட்டு ஏன் காவி அரசியல் மீது ஆசை கொண்டார்? இதற்கு விடைதேடவே இந்த பதிவு.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

அசோகரின் மனம் மாறி மதம் மாற கலிங்கப்போர் காரணமாக இருந்தது என்றா ல் அண்ணாமலை மனம்மாறி தன் மதம்தேட துணையாக இருந்தது கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் உள்ள பாபா புதன்கிரியாகும்.

பாபா புதன் கிரியில் 2017 ம் ஆண்டு டிசம்பர்மாதம் 3 ம் தேதி நிகழ்ந்த ஒரு மதப் போராட்டம் தான் அண்ணாமலை அவர்களுக்கு மனமாற்றத்தை அளித்து தன் மதம் சார்ந்த அரசியலைதேட வைத்தது.

அதென்னப்பா…பாபா புதன்கிரி என்று கேட்கிறீர்களா..ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் பாபா புதன்கிரி
யை தென்னிந்திய அயோத்தி என்றே கூறுவார்கள்.கர்நாடகாவில் உள்ள இந்து க்களும் முஸ்லிம்களும் ஒவ்வொரு ஆ ண்டும் மார்கழி மாத பௌர்ணமி அன்று இந்த பாபா புதன்கிரி மலையை தான் பயத்துடன் பார்த்து இருப்பார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பௌர்ணமி அன்று தான் தத்தா ரேயர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு
வருகிறது.தத்தாரேயர் ஜெயந்தி வழிபாடு பாபா புதன்கிரி மலையில் உள்ள குகை கோயிலில் படு விமர்சையாக மூ ன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது.

தத்தாரேயர் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்..சிவன் விஷ்ணு பிரம்மா என்று மும்மூர்த்திகளும் உலக உயிர்கள் ஞா னம்பெற வேண்டி அத்ரி முனிவர் அனுசுயா தேவி மூலமாக ஒரு அவதாரத்தை உருவாக்கினார்கள்.அவர் பெயர் தான் ஸ்ரீதத்தாத்ரேயர்.

மும்மூர்த்திகளின் அவதாரம் என்பதால் தத்தாரேயர் ஆறு கைகளுடன் அதில் மும்மூர்த்திகளின் அடையாளங்களை
கொண்டு இருக்கிறார்.தத்தாரேயர் பற்றி மகாபாரதம் ராமாயணத்திலும் இருப்பதா ல் தத்தாரேயர் வழிபாடு சில இடங்களில்
மிகவும் விமரிசையாக இருக்கிறது.

தத்தாரேயர் பற்றி இன்னொரு விசயம் இருக்கிறது. ராவணனனை ராம பிரான் தோற்கடித்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.ஆனால் அதற்கு முன்பே ராவணனை ஒருத்தர் மண்ணை கவ்வவைத்துள்ளதாக ராமாயணம் கூறுகிறது அவர் தான் கார்த்த வீரிய அர்ஜுனன்.

கார்த்த வீரிய அர்ஜூனன் மகாபாரதம் கூறும் பாண்டவ புத்திரர் அல்ல மாறாக பண்டை ய பாரதம் கூறும் ஹேஹேய
நாட்டின் மன்னர். தத்தாரேயர் அருளி னால் பிறந்து அவரின் வரம் பெற்று மகாவீரனாக விளங்கிய கார்த்த வீரிய அர் ஜூனன் ராவணனை வென்றதால் தத்தா ரேயர் மகிமை பற்றி இந்து புராணங்களி ல் அதிகமாக பேசப்படுகிறது.

இப்படிப்பட்ட தத்தாரேயர் காடுகளில் தா ன் வாழ்ந்தார் என்றும் அவருடைய பாதம் சிக்மகளூர் பகுதியில் உள்ள சந்திரதிரி கோண மலையில் அதாவது பாபா புதன் கிரியில் உள்ள உள்ள ஒரு குகையில் இருக்கிறது என்று நம்முடைய முன்னோர்கள் கூறிய நம்பிக்கையின்அடிப்படை யில் பாபா புதன் கிரிமலையில் உள்ள தத்தா பீடம் இந்துக்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது.

மாநிலம் முழுவதும் இருந்து இந்துக்கள் பாபா புதன்கிரியில் உள்ள தத்தாரேயர் பீடம் என்கிறதத்தா பீடத்திற்கு வந்து அ ங்குள்ள தத்தா ரேயரின் பாதத்தை வணங்கி செல்வதுகாலம் காலமாக நடைபெ ற்று வருகிறது.ஆனால் தத்தாரேயர் ஜெ யந்தி நடைபெ றும் அந்த மூன்று நாட்க ளும் சிக்மகளூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.

தத்தாரேயர் ஜெயந்தி போலீஸ் பாதுகா ப்பு என்றவுடன் உங்களுக்கு ஏதோ பாபா புதன் கிரியில் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது அல்ல வா.. அதனால் தான் இதைதென்னிந்திய அயோத்தி என்கிறார்கள்.ஏனென்றால் தத்தாரேயர் பீடத்திற்கு அருகில் ஒரு மு ஸ்லிம் தர்க்கா இருக்கிறது.

கி.பி 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த பாபா புதன் என்பவர் மெக்காவுக்கு போய் விட்டு வ ந்து தன்னை ஒரு ஞானியாக கூறி ஒரு ஆசிரமத்தை அமைத்து அவருடைய சீடர் களுக்கு ஆன்மீக பாடங்களை கற்றுக் கொடுத்து வாழ்ந்துவந்தார்.

இந்து மத அடையாளங்களை உள் வா ங்கி இஸ்லாமிய வழிபாட்டை இசையின் மூலமாக எடுத்துச்சென்று இறைவனை
அடைய போதிக்கும் தத்துவமே சூஃபியி சம்.இந்த சூஃபியசம் தான் இந்தியாவில் இஸ்லாம் வேகமாக பரவ துணை நின்ற
து.

பாபா புதன் மெக்காவுக்கு போய்விட்டு வரும் பொழுது கொண்டு வந்த காஃபி தைகளினால் தான் இந்தியாவில் காஃபி வந்தது என்கிற கதையும் இருக்கிறது.இப்படி பாபா புதன் வந்து செட்டிலான பிறகு சந்திர திரிகோண மலையின் பெயரும் பாபா புதன்கிரியாகி விட்டது.

ஆக பாபா புதன் கிரிமலை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வந்து வணங்கி விட்டு செல்லும் ஒரு முக்கிய வழிபாட்டு தலமாக மாறியதால் காலப் போக்கில் அயோத்தி ராமர் கோயில்பாபர் மசூதி மாதிரி இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே ஒரு பிரச்சினைக்குரிய பகுதியாகவே
இருந்து வருகிறது.

1975 க்கு முன்பு வரை ஸ்ரீ குரு தத்தாத்ரே யா பாபா புதான் சுவாமி தர்கா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் இந்துக்
களும் முஸ்லிம்களும் இணைந்து அவரவர் மத வழிபாடு படி பாபா புதன் கிரி மலையில் வழிபாடு நடத்தி இருக்கிறா ர்கள்.இந்த வழிபாட்டு தலமும் இந்து ஆல யங்களை வழிநடத்தி வரும் கர்நாடக அரசின் முஸ்ராய் துறையின் கீழ் இருந்து வந்தது

முஸ்ராய் துறை என்பது நம்முடைய இ ந்து அறநிலையத் துறை மாதிரி இந்து கோயில்களை மட்டும் வழிநடத்தும் கர்
நாடக அரசின் துறை. இப்படி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபா புதன் கிரி மலை வழிபாட்டு தலத்தை ஓட்டு அரசி யலுக்காக முஸ்லிம்களின் வக்ஃபு போ ர்டுக்கு 1975 ல் அளித்த பிறகு தான் பாபா புதன் கிரியில் மத ரீதியான பிரச்சினை
கள் உருவாக ஆரம்பித்தது

ஏனெனில் அரசின் கட்டுப்பாட்டில் இரு ந்து பாபா புதன் கிரி வக்ஃபு போர்டு கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கு இருந்த
தாத்ரேயரின் பாதம் மற்றும் விளக்கை அப்புறப்படுத்த ஆரம்பிக்க இந்துக்கள் வரிந்து கட்டி போராட ஆரம்பித்தார்கள்

தத்தாரேயர் அடையாளங்களை அழிக்க நினைத்த வஃபு போர்டு செயலுக்கு சிக்மகளூர் மாவட்ட கோர்ட்டில் இந்துக்கள் வழக்கு தொடுக்க வழக்கின் தீர்ப்பில் தத்தாரேயர் பீடத்தில் இந்துக்களின் வழி பாட்டு உரிமையை உறுதி செய்தது செச
சன்ஸ் கோர்ட்.

இதை எதிர்த்து வக்ஃபு போர்டு கர்நாடக உயர்நீதிமன்றம் செல்ல அங்கும் இந்து க்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வக்ஃபு வாரியம் வழக்கு தாக்கல் செய்ய வழக்கை வழக்கம்போல உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

அதாவது பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தொடரப்ப ட்ட வழக்கை நீண்ட வருடங்களாக விசா ரித்த உச்சநீதிமன்றம் கடைசியில் எங்களால் முடியவில்லை மாநில அரசே இது பற்றி முடிவெடுத்து கொள்ளலாம் என்று
கூறி விட்டது.

இதற்கிடையில் பாபா புதன் கிரியை முன் வைத்து இந்து அமைப்புகள் போராட ஆரம்பிக்க சிக்மகளூர் மாவட்டத்தில் பிஜேபி படு வேகமாக வளர ஆரம்பித்தது. பாபா புதன்கிரி மலை உள்ள சிக்மகளூர் தொ குதியில் 2004 ல் இருந்து தொடர்ந்து 4
முறை பிஜேபி ஜெயித்து வருகிறது என்றால் தத்தாரேயர் அருள் யாருக்கு இருக்கிறது என்று பார்த்து கொள்ளுங்கள்.

நம்முடைய தமிழக பிஜேபியின் புதிய பொறுப்பாளராக வந்து இருக்கும் சி.டி ரவி அவர்கள் தான் பாபா புதன் கிரி ம லையை உள்ளடக்கிய சிக்மகளூர் தொகுதியின் எம்எல்ஏ.தெற்கு கர்நாடகாவில் பிஜேபியை வளர்த்து வரும் எடியூரப்பா என்று இவரை கூறலாம்.

இந்த சி.டி ரவி தான் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை பிஜேபிக்கு அழைத்து வந்தார். 2017 டிசம்பர் 3 ல் வந்த தத்தா ஜெயந்தி அன்று பாபா புதன் கிரி மலை யை மீட்க இந்து அமைப்புகள் ஆக்ரோச மாக களம் புக அதை எதிர் கொள்ள இஸ்லாமிய அமைப்புகளும் தயாராக அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு வந்த து தெரியுமா?

கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்படும் அண்ணாமலைக்கு தான். சிக்மகளூர் எஸ்பியாக இருந்த அண்ணாமலை திர
ண்டு நின்ற இந்து அமைப்புகளையும் இஸ்லாமிய அமைப்புகளையும் தன்னு டைய சாமர்த்தியமான அணுகுமுறையா
ல் கட்டுப்படுத்தி பெருமளவில் நடைபெற இருந்த இந்து முஸ்லிம் கலவரத்தை தடுத்து நிறுத்தினார்.

ஆனால் 2017 டிசம்பர் 3 ல் நடைபெற்ற தத்தா ஜெயந்தியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் பாபா புதன் கிரியில் உள்ள தர்க்காவை சேதப்படுத்துவதை பார்த்த அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் இந்து அமைப்பினர் மீது தடியடி நடத்த சிதறி ஓடிய அவர்
களின் உடலில் இருந்து கொட்டிய உதிரம்பார்த்த அண்ணாமலை கலிங்கப்போர் முடிந்து கலங்கி நின்ற அசோகரின் மன
நிலைக்கு வந்து விட்டார்.

பச்சை பசேலென இருக்கும் பாபா புதன்கிரி மலை போலீஸ் தடியடியினால் இ ந்துக்கள் உடலில் இருந்து சிந்திய ரத்தத்
தினால் காவியாக மாறியதை பார்த்த அண்ணாமலை மனதும் மாற துவங்கியது.இந்த நிலையில் போலீஸ் தாக்குதலு க்கு எதிராக இந்து அமைப்புகள் மிகப்பெ ரிய போராட்டத்திற்கு தயாராக அதை தடுத்து நிறுத்த மாவட்ட எஸ்பி என்கிற முறையில் சி.டி ரவியை நோக்கி தேடி வந்தார் அண்ணாமலை ஐபிஎஸ்.

அண்ணாமலையின் இந்த தேடல் தான் அவரின் அரசியல் பாதைக்கு வழி ஏற்படுத்தியது.சி.டி.ரவி பாபா புதன் கிரி மலை யில் இந்துக்களுக்கு உள்ள உரிமையை ஆதாரங்களுடன் விளக்கி கூற அதுவரை கம்பீரமாக காக்கி உடையுடன் கடமை யை செய்தோம் என்று நிமிர்ந்து நின்ற
அண்ணாமலை இந்துக்களின் உரிமை போராட்டம் இது என்று தெளிய ஆரம்பி த்தார்.

அரசுக்கு அடி பணிந்து கடமையை செய் வதை விட மனதுக்கு அடி பணிந்து பணி செய்வதே சிறந்தது என்று உணர்ந்து
சி.டி ரவியை அடிக்கடி தேட ஆரம்பித்தார் ரவியும் அண்ணாமலை அவர்களின் அறிவும் ஆற்றலும் பிஜேபிக்கு தேவை என்று வலியுறுத்த அண்ணாமலை பாதை மாற ஆரம்பித்தார்.

பாதை மாறி மனம் பயணிக்க ஆரம்பித்த பிறகு அண்ணாமலை க்கு காக்கி உடை மீது ஆர்வம் குறைந்து காவி அரசியல் மீது ஆர்வம் அதிகரிக்க போதும்டா போலீஸ் வேலை என்று தூக்கி எறிந்து விட்டு பொது வாழ்க்கைக்கு வர தயார் என்று
சி.டி ரவியிடம் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒட்டி அறிவித்து விட்டார்.

தமிழக அரசியலில் பிஜேபியை வலுப்படு த்த சரியான ஆள் தேடி கிடைக்காமல் வெறுப்பில் இருந்த அமித்ஷாவிடம் இதோ நீங்கள் தேடியவர் என்று அண்ணாம லையை அழைத்து செல்ல அமித்ஷாவே அண்ணாமலையின் அறிவுத்திறன் கண்டு வியந்து நிஜமான அண்ணாமலையே நம்மிடம இருக்க இனி அண்ணாமலை பட ஹீரோ ரஜினியெல்லாம் எதற்குப்பா? என்று அண்ணாமலை அவர்களை தமிழக அரசியல் களத்தில் இறக்கி விட்டு விட்டார்.

அண்ணாமலையும் தமிழக அரசியலை மிக சிறப்பாக மாற்றிக் கொண்டு இருக்கிறார் .அண்ணாமலையை தமிழக பிஜேபிக்கு அனுப்பிய அமித்ஷா அடுத்து அவரை மனம் மாற்றிய சி.டி ரவியையும் தமிழக பிஜேபிக்கு பொறுப்பாளராக அனுப்பி விட்டார்.

இதைத்தாங்க தத்தாரேயர் அருள் என்று கூற வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள தத்தாரேயர் பீடத்தில் சந்தித்து கொண்ட ஒரு போலீ ஸ் அதிகாரியும் அந்தப்பகுதி பிஜேபி எ ம்எல்ஏவும் இன்று தமிழக அரசியலை மாற்ற இணைந்து இங்கே இருக்கிறார்கள்.

இது தாங்க கடவுளின் கட்டளை. சி.டி ரவி யையும் அண்ணாமலை அவர்களையும் பார்க்கும் பொழுது எனக்கு தத்தாரேயரை
யும் அவரின் அருள் பெற்று ராவணனை வீழ்த்திய கார்த்த வீரிய அர்ஜூனன் நினைவு தான் வருகிறது. தமிழக பிஜேபி பொறுப்பாளராக உள்ள தத்தாரேயர் சி.டி ரவியின் துணையுடன் அவரால் அரசியலுக்கு வந்த கார்த்த வீரிய அர்ஜூ னனான அண்ணாமலை அவர்கள் தமிழ கத்தில் உள்ள ராவண அரசியலை ஒழித்து தமிழகத்தை காப்பாற்றுவார்.

இது தான் மும்மூர்த்தி களின் அவதரா ரமாக கருதப்படும் தத்தாரேயர் தமிழகத்திற்கு அளித்துள்ள வரம்..
.
கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

டில்லியில் அரசு வீடுகளை வாடகைக்கு விட்ட இரண்டு தி.மு.க எம்.பி.க்கள்!அட்ராசிட்டி அளவில்லாமல் போகுது!

டில்லியில் அரசு வீடுகளை வாடகைக்கு விட்ட இரண்டு தி.மு.க எம்.பி.க்கள்!அட்ராசிட்டி அளவில்லாமல் போகுது!

October 17, 2021

காந்தி நகரில் அடித்த காவி சுனாமி ! வரலாற்று வெற்றியை பதிவு செய்து காங்கிரசை காலி செய்தது பாஜக…

October 6, 2021
விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

September 21, 2021
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயர தேசிய சின்னத்தை பாரத பிரதமர் திறந்து வைத்தார்..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயர தேசிய சின்னத்தை பாரத பிரதமர் திறந்து வைத்தார்..

July 11, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x