என்னாது 500 கோடியா? தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்ய தெரியாது! அண்ணாமலை நெத்தியடி பதில்

ஒரேதேசம் செய்திகள்

ஒரேதேசம் செய்திகள்

தமிழகத்தின் ஹாட் டாபிக் அண்ணாமலை தான் ஏனென்றால் அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது. திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது தான். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி ரூ.5,000 கோடி மதிப்பிலான மின்சார வாங்குவதற்கான ஒப்பந்தம் தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர், அந்த திவாலான கம்பெனியை விலைக்கு வாங்கி, அதனை தமிழக மின்சார வாரித்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், அந்தக் கம்பெனியின் பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை எனக் கூறிய அவர், இதை நீடித்தால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என கூறியிருந்தார்.

இந்த சூழலில், அண்ணாமலையின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 24 மணிநேரம் கால அவகாசம் தருகிறேன். மின்சாரத்துறையில் ஊழல் நடக்கவிருப்பதாகக் கூறிய அண்ணாமலை, அந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனப் பதிலளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலையும் முதல் ஆதாரத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் கடந்த சில மாதங்களாக எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை என்றும், இந்த சூழலில் திடீரென 4% கமிஷன் பிடித்தம் போக ரூ.29.64 கோடியை விடுவித்துள்ளது, இதற்கு பதில் கூறுங்கள் எனக் கூறியிருந்தார்.

மேலும், இப்போது நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புவதாகக் கூறிய அண்ணாமலை, ஆலோசகர்கள் சென்னையில் வீட்டில் அமர்ந்து கொண்டே 4% கமிஷனை வசூலித்து வருவதாகவும், இந்த வாரம் அனல்மின் நிலையம், அடுத்த வாரம் சோலார் பவர், அடுத்து அடுத்த வாரம் இன்னும் பெரிய நிறுவனம் தயாராகி வருவதாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், பி.ஜி.ஆர்., நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! தி.மு.க., அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version