தி.மு.கவை எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்! அமைதி காக்கும் அறிவாலயம்! அதிரடி காட்டும் அண்ணாமலை!

தமிழகத்தை கேரளவிடம் அடகு வைத்து மண்டியிட்டுள்ளது விடியல் அரசு. இதற்கு ஒரே காரணம் ஸ்டாலின் அரசின் வெட்டி விளம்பரம் மற்றும் முன்களப்பணியார்கள் என சொல்லும் மீடியாவும் தான். தவறு செய்தால் மூடி மறைப்பதற்கு ஸ்டாலினை ஹீரோவாக சித்தரித்து மக்களை முட்டளாக்கி வருகிறார்கள்.மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தின் உரிமையினை இழந்துள்ளார்கள். அதை பற்றி பெரிய அளவில் ஊடகங்கள் பேசவில்லை.

இந்த முல்லைபெரியாறு அணை என்பது கேரளாவின் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக அணை. அணை இருக்குமிடம் கேரளாவுக்கானது ஆனால் அணையும் அதன் பாசனமும் தமிழ்நாட்டுக்கானது.இந்த முல்லைபெரியாறு அணையினை இடித்துவிட்டு கேரளாவுக்கு சாதகமாக இன்னொரு இடத்தில் அணைகட்ட வேண்டும் அல்லது அணையே இல்லாமல் போகவேண்டும் என்பது கேரளாவின் திட்டம் இதனால் 137 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க விடாது, அணை பலமில்லை அது உடைந்தால் கேரளா நீரில் மூழ்கும் என அடிக்கடி பயம்காட்டும்

இந்நிலையில் 142 அடிவரை நீரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிதந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போது ஆட்சியில் அரசியல் அனுபவமற்றவிடியல் அரசின் தலைவர் ஸ்டாலினார் இருப்பதால் கேரளாவுக்கு மிகபெரிய கொண்டாட்டம், அணையின் நீர்மட்டம் 137 அடியில் இருக்கும்பொழுது அவர்களே அணையினை திறந்து கொண்டனர். தமிழக அதிகாரிகள் இல்லாமல் அணையை திறக்கக்கூடாது என்பது தான் சட்டம் அதுதான் தமிழக உரிமை. ஆனால் திமுக அரசில் இந்த உரிமை பறிபோயுள்ளது.

தமிழகத்தின்தமிழ் என பொழப்பை ஓட்டிவரும் கட்சிகள் எல்லாம் உறக்கத்தில் இருக்க தமிழகத்துக்கு நிகழ்ந்த இந்த அநீதியினை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்துக்கு இழைக்கபட்ட அநீதியினை கண்டு முதலில் கொதித்தவர் அவர்தான் ஆனாலும் தமிழக அரசு அமைதி இதனால் “கம்யூனிஸ்டு ஆதரவோடு அடுத்த முறை துணைபிரதமராக தமிழக நலன்களை இப்பொழுது மலையாள கம்யூனிஸ்டுகளிடம் ஸ்டாலின் விட்டுவிட்டார்” என அண்ணாமலை மறுபடி கொதிக்க திமுகவுக்கு சிக்கலாயிற்று

அதுவரை தூக்கத்தில் இருந்த ஸ்டாலின் அரசு விழித்து, தமிழகத்திலும் ஒரு நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் என இருப்பதை உணர்ந்து அவரை அங்கே அனுப்பியது இது நிச்சயம் அண்ணாமலையின் முதல் வெற்றி விஷயம் வில்லங்காமதை அறிந்த கேரள அரசு மவுனமாக விஷயத்தை முடக்கபார்த்து தமிழகத்துக்கு ரகசிய சிக்னல் காட்டியது, அதாவது தமிழகத்துக்கு சார்பான விஷயங்களை மவுனமாக செய்ய சொன்னது தமிழகத்துக்கு ஆதரவாக முல்லைபெரியாரின் அடியில் இருக்கும் பேபி அணையில் (குட்டி அணைகள்) இடைஞ்சலை கொடுக்கும் மரங்களை வெட்டி நீர்வரத்தை சரி செய்ய அனுமதி வழங்கியதுஅதாவது கேரள பகுதியில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது, இது அணையில் தமிழக உரிமையினை அங்கீகரிக்கும் செயல்

இதை ரகசியமாக தமிழக அரசு செய்திருக்கலாம், அப்படித்தான் செய்ய வேண்டும் ஆனால் அரைகிலோ அரிசி கொடுத்தாலும் அதை அகிலமெல்லாம் சொல்லி அதனை முன்களபணியாளர்கள் ஏதோ தேவலோக அமிர்ந்தம் வழங்கும் கடவுள் போல ஸ்டாலினை சித்தரிப்பது தமிழக வழமை அந்த வழமையில் “ஸ்டாலினுக்கு பணிந்தது கேரளம்” “சேரனை வென்றான் சோழபெருமகன்” என தமிழக பத்திரிகைகள் அடித்து விளாசின‌ ஸ்டாலினும் “மரம் வெட்ட அனுமதித்த கேரள அரசுக்கு நன்றி” என தனக்கு தானே பெருமைபட்டு கொண்டார் விஷயம் கேரளாவில் கசிந்து பெரும் சிக்கலாகியது.

இப்பொழுது மரம்வெட்ட தடை என கேரள அரசு சொல்லிவிட்டது, தமிழக அரசுக்கு பெரும் அவமானம் மறுபடியும் அவர்கள் அமைதி அண்ணாமலை இந்த மரம் வெட்ட தடை என கேரள அரசு சொல்லி தமிழக அரசின் முகத்தில் அடித்திருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டார் இது அவரின் இரண்டாம் வெற்றி தமிழக அரசு தன் கன்னத்தில் விழுந்த கேரள அடியினை கண்டு கலங்கி முகத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டது

தமிழக கம்யூனிஸ்டுகள் என்றால் 25 கோடிவரை கொடுத்து வழிக்கு கொண்டுவரலாம், கேரள கம்யூனிஸ்ட் அப்படி அல்ல என்பதால் அறிவாலயம் கனத்த அமைதி. மேலும் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் தமிழக முதல்வரை அவமதித்துள்ளது. இது குறித்து கேரளம் கம்யூனிஸட் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால் திமுக அமைதியாக மிக்சர் சாப்பிட்டு வருகிறது.

ஆனால் பாஜக தலைவர்அண்ணாமலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தில் அதாவது தமிழக நலனை கேரளா காலில் போட்டு மிதிக்கும் பொழுது தமிழக நிலை என்ன என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என அவர் தமிழக ஊடகங்களை கேள்வி கேட்க வலியுறுத்துகின்றார்.

Exit mobile version