அடுத்த புயலை கிளப்பிய அண்ணாமலை! டார்கெட் இந்த அமைச்சர் தான்! அதிரும் அறிவாலயம்!

Annamalai ips

Annamalai ips

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் முதல் கட்ட நடைபயணம் முடித்துக்கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஜனவரியில் பாஜக நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நேற்று கோவை சென்று திரும்பிய அண்ணாமலை இன்று, விழுப்புரம் பெருங்கோட்டத்தில், புதியதாக இணைக்கப்பட்டுள்ள 1297 பூத்களிலும், 1297 கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.:

நீட் தேர்வை பொருத்தவரை தற்போது ஆளுநரின் பங்கு ஏதும் இல்லை. குடியரசு தலைவர்தான் முடிவு எடுப்பார். இவர்கள், கோரிக்கையை குடியரசு தலைவரிடம்தான் வைக்க வேண்டும். ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும்.

இதுகுறித்து பதில் சொல்ல திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?. காவிரி பிரச்சினைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதில், இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதல்வர் ரசிக்கிறார்.

சந்திராயன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. இனி உலக நாடுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்திரயான் வெற்றி அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. பல நிறுவனங்கள் இதற்கு உதவி செய்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், CAG – திமுக, அதிமுக ஆட்சியில் கூட அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ரயில்வே துறையில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக செலவாகி இருப்பதை (Cost over) தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இது அனைத்து மாநில அரசுக்கும் இதுபோன்று cost over இருக்கும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிப்போம் என தெரிவித்தார்.தமிழக அரசு கூட விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்து இருக்கிறார்கள். மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் மாநில அரசு விளம்பரத்திற்காக செலவு செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்,

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆ ர் ராமசந்திரன் தங்களுடைய பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். கீழமை நீதிமன்றம் வேறு நபர்கள் சொல்லி இருக்கும் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்.

நீதிமன்றத்திலும் திமுக தலையீடு இருக்கிறது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஊழல் அரசு போல் வேறு எங்கும் இல்லை.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையை கலைக்க வேண்டும். மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை மனு போட்டு இருக்கிறது. இன்னும் அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு வரும் என தெரிவித்தவர், இது தொடர்பாக செய்திகளின் அடிப்படையில் தான் பேசுவதாக கூறினார்.

இதனிடேயே அறிவாலயம் தரப்பு அதிர்த்துள்ளதாம்.

Exit mobile version