Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளான் !அண்ணாமலை தொடர்ந்து பாஜகவில் இணையும் மற்றோரு ஐபிஎஸ் அதிகாரி !

Oredesam by Oredesam
September 20, 2022
in அரசியல், செய்திகள்
0
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளான் !அண்ணாமலை தொடர்ந்து பாஜகவில் இணையும் மற்றோரு ஐபிஎஸ் அதிகாரி !
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசியலில் அண்ணாமலை யை வைத்து திமுக மற்றும் அதிமுகவுக்கு இனிமா கொடுத்து கொண்டு இருக்கும் பிஜேபிஆந்திர அரசியலில் அண்ணாமலை மாதிரியே விருப்ப ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஆந்திர மக்களால் ஜேடிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் லட்சுமி நாராயணா அவர்களை பிஜேபியில் இணைய வைக்க இருக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரவும் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் பிஜேபியை அதிகமான லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற வைக்கவும் அமித்ஷா நடத்தி வரும் மிஷன் சௌத் இந்தியாவில் மிக முக்கியமான ஆந்திர அரசியலை கைப்பற்ற மிக தீவிரமாக ஆலோசனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறார் பிஜேபியின் ஸ்ட்ரேடஜிஸ்ட்களில் ஒருவரான திரிபுரா வெற்றி நாயகன் சுனில் தியோடரை ஆந்திர மாநில பொறுப்பாளராக கொண்டு வந்து 3 வருடமாக ஆந்திர அரசியலை கைப்பற்ற பிஜேபி போராடிக் கொண்டு இருக்கிறது.

READ ALSO

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

ஆனாலும் சுனில் தியோடரால் ஆந்திராவில் பிஜேபியை பெரியளவில் வளர்க்க முடியவில்லை என்பதால் அமித்ஷா வியூகங்களை மாற்ற ஆரம்பித்துவிட்டார்.இதன் விளைவாக மீண்டும் பிஜேபி தெலுங்கு தேசம் இடையே கூட்டணி ஏற்படும் என்கிற பேச்சுகள் அடிபட ஆரம்பித்து இருக்கிறது.

மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்ததும் அதற்கு பிறகு சந்திரபாபுநாயுடு வின் மகன் நர லோகேஷ் அமித்ஷாவை சந்தித்ததும் ஆந்திராவில் மீண்டும் பிஜேபி தெலுங்குதேசம் இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக ஆந்திர மீடியாக்கள் கூற ஆரம்பித்து விட்டன.

பிஜேபிக்கும் வேறு வழியில்லை. ஜெகன் மோகன் ரெட்டியுடன் கூட்டணி வைக்க முடியாது. இப்பொழுது கூட்டணியில் உள்ள ஜனசேனா வருகின்ற லோக்சபா தேர்தலில் நிச்சயமாக பிஜேபியை கழற்றி விட்டு தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதால் பிஜேபியும் வேறு வழியின்றி தெலுங்கு தேச கூட்டணியை நோக்கியே போயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதனால் வருகின்ற லோக்சபா தேர்தலில் பிஜேபி தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என்றாலும் கூட்டணியில் பிஜேபியின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் உள்ள வலுவான அரசியல் தலைவர்களையெல்லம் பிஜேபிக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.ஆந்திராவின் முன்னாள் முதல் அமைச்சரான கிரன் குமார் ரெட்டி பிஜேபியில் இணைய தயாராகி வருகிறார்.

இவரை தொடர்ந்து காங்கிரசில் எஞ்சி இருக்கும் தலைவர்களும் பிஜேபியை நோக்கி வர இருக்கிறார்கள் .இவர்களை விட முக்கியான ஒரு அரசியல் வாதி பிஜேபியில் இணைய இருக்கிறார்.அவர் தான் லட்சுமி நாராயணா ஐபிஎஸ்.மகாராஸ்டிரா மாநில காவல்துறையின் ஏடிஜிபி பொறுப்பில் இருந்து 7 வருடங்களுக்கு சர்விஸ் இருந்தும் அதை உதறி தள்ளி விட்டு 2018 ல் விருப்ப ஓய்வு அளித்து ஆந்திர அரசியலுக்கு ஏன் வந்தார்? என்பது மோடி அமித்ஷாவுக்கு தான் தெரியும்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் கர்நாடாகாவில் இருந்து தன்னுடைய ஐபிஎஸ் வேலை யை உதறி விட்டு தமிழகம் வந்தார்.ஆக அண்ணாமலை மற்றும் லட்சுமிநாராயணா இருவரும் பணியில் இருக்கும் பொழுதே தங்களின் ஐபிஎஸ் வேலையை துறந்து அரசியலுக்கு வருவதற்கு பின்னால் பிஜேபி தான் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

1990 ல் இந்தியாவிலேயே முதலிடத் தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற லஷ்மி நாராயணா ஐஏஎஸ் வேண்டாம் என்று ஐபிஎஸ் ஆகி மகாராஸ்டிரா மாநிலத்தில் தீவிர வாத தடுப்பு பிரிவில் சேர்ந்தார். அன்றிலிருந்து இப்பொழுது மகாராஸ்டி ரா ஏடிஜிபி வரையிலும் சிபிஐ இணை இயக்குனராகவும் அவர் ஆற்றிய பணியினை இனி எந்த ஒரு ஐபிஎஸ் ஆபிசராலும் செய்ய முடியாது.

ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்த ரட்சகர் என்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் அடையாளம் கண்டு போற்றி புகழ்ந்து வரும் ஐபிஎஸ் அதிகாரியான வி வி லட்சுமி நாராயணா மகாராஸ்டிரா மாநிலத்தில் ஏடிஜிபியாக இருந்து 2018 ல் ராஜினாமா செய்து விட்டு ஆந்திர அரசியலில் கால் வைத்த லட்சுமி நராயணா 2019 லோக்சபா தேர்தலை ஒட்டி பிஜேபியில் இணைவார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்பொழுது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கிளப்பி விட்ட ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதர மோடி அரசு மறுக்கிறது என்கிற பிரச்சாரம் ஆந்திராவில் பிஜேபியின் அரசியலையே அஸ்தமிக்க வைக்க பிஜேபியில் இணைய காத்து இருந்த லட்சுமி நாராயணாவை மாற்று வழியை யோசிக்க வைத்தது.

அதனால் அப்பொழுது பவன் கல்யாணின் ஜனசேனாவில் சேர்ந்து 2019 லோக்சபா தேர்தலில் விசாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் போட்டி யியிட்டு சுமார் 3 லட்சம் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.ஆந்திர மக்களிடையே லட்சுமி நாராயணாவுக்கு தனி செல்வாக்கு இருந்தாலும் ஓய்எஸ் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் என்கிற இரண்டு மாபெரும் அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வரும் அரசியல் போட்டியில் அவருடைய தனி மனித செல்வாக்கு தோல்வி அடைந்து விட்டது.

இதனால் அரசியலில் இருந்து விலகநினைத்த லட்சுமி நாராயணா ஜனசேனாவில் இருந்து விலகி மக்கள் நலன்சார்ந்த கூட்டங்களை நடத்தி மக்களிடையே நெருக்கமாகவே இயங்கி கொண்டு இருக்கிறார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கூட்டங்களில் பங்கு பெற்று இருப்பதன் மூலமாக லட்சுமி நாராயணா பிஜேபியில் இணைவதை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்க காத்து இருக்கிறது.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணாமலை அவர்களை தட்டிக்கொடுத்து தமிழக பிஜேபி தலைவராக கொண்டு வந்து தமிழக அரசியலை மாற்றிக் கொண்டு இருக்கும் பிஜேபி தலைமை ஆந்திராவில் பிஜேபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல லட்சுமி நாராயணா தான் சரியான ஆள் என்கிற முடிவுக்கு வந்து

அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.லட்சுமி நாராயணாவும் விரைவில் பிஜேபியில் இணைந்து ஆந்திர மாநில பிஜேபி தலைவராகி ஆந்திர அரசியலை கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னொரு முக்கியமானவிசயம் என்னவெனில் ஆந்திரா மாநில அரசியலை ரெட்டி நாயுடுகளுக்கு\இணையாக காபுக்களை முன் வைத்து அரசியல் செய்ய நினைத்து வரும்நிலையில் காபு இனத்தை சார்ந்த லட்சுமி நாராயணா பிஜேபிக்கு ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழும் ஏழைகள் விவசாயிகள் மற்று ம் இளைஞர்கள் மத்தியில் லட்சுமி நாராயணா தான் நிஜமான ஹீரோ ஏனென்றால் இவரால் ஜெயிலுக்கு போனவர்கள் யாரெல்லாம் தெரியுமா? கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள் ள ஒபலாபுரம் சுரங்க கம்பெனியில் லட்சுமி நாராயணா நுழைந்த பிறகு தான் கர்நாடகா அரசியலில் கொடி கட்டி ப்பறந்த ரெட்டி பிரதர்ஸ்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதோடு ரெட்டி பிர தர்களின் மகாகேடியான ஜனார்த்தன ரெட்டியை ஜெயிலில் தள்ளி அவரின் வாயாலேயே சுரங்க ஊழலில் ஆந்திராவில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உள்ள தொடர்பை உறுதி செய்து ஜெகனையும் ஜெயிலில் தள்ளியவர் லட்சுமி நாராயணா.ஆந்திர காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் முகமான ராஜ சேகர ரெட்டியின் காலத்தில் துபாயை சேர்ந்த ஈஎம்ஆர் ரியல் எஸ்டேட் கம்பெனி ஆந்திர மாநில தொழில் கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்ட பவுல்டர் ஹில்ஸ் ப் ராஜெக்ட்டில் புகுந்து விளையாடிய காங்கிரஸ் கட்சியின் ஊழலை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ இணை இயக்குனராக லட்சுமி நாராயணா விசாரித்து.

இதிலும் ஜெகன் மோகன் ரெட்டியை கை து செய்து ஜெகனின் சொத்துக்களை முடக்கியவர்.இதை விட முக்கியமான வழக்கு ஒன் று தான் இன்றும் ஆந்திர மக்களின் மனதில் லட்சுமி நாராயணாவை நிலைத்து நிற்க வைத்துள்ளது .சத்யம் கம்யூட் டர்சின் சேர்மன் ராமலிங்க ரா ஜுவை ஜெயிலில் தள்ளியது தான்.

அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ராமலிங்க ராஜூ வை பயன்படுத்தி வளர்ந்தவர்கள் தான் ராஜசேகர ரெட்டியும் அவருடைய மகன் ஜெகன் மோகன் ரெட்டியும்.இப்படி ஆந்திர மாநிலத்தை உலுக்கிய ஊழல்களை எல்லாம் விசாரித்து அதற்கு காரணமானவர்களை ஜெயிலில் தள்ளி அவர்களுக்கு தண்டனை வாங்கிகொடுத்ததன் மூலம் ஆந்திர மக்களின் நம்பிக்கை நாயகனாக இன்றும் இருக்கிறார் லட்சுமி நாராயணா ஐபிஎஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை சரித்து அவரை சிறைக்கு அனுப்பியதன் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர எதிரியாக மாறிய லட்சுமி நாராயணாவை பிஜேபிக்கு கொண்டு வருவதன்மூலமாக ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் சாம்ராஜ்ஜியத்தையும் முறியடித்து 2024 ல் ஆந்திராவில் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கும் பிஜேபியின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.

கட்டுரை :- விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Related Posts

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

May 2, 2020
vanathi Srinivasan

ஆரிய திராவிட இனவாத கட்டுக்கதை வைத்து பிழைப்பு நடத்தும் திமுக வானதி அதிரடி.

October 26, 2023
ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

June 29, 2022

இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் .

May 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x