பாய் வீட்டு பிரியாணிக் கடையை ஆய்வு நகராட்சி அதிகாரிகள் மீது தாக்குதல் இந்துமுன்னணி கண்டனம்.

மயிலாடுதுறை நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்படும் பாய் வீட்டு கல்யாண பிரியாணி என்ற ஹோட்டலில் ஆய்வு நடத்தச் சென்ற சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஹோட்டல் ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நகராட்சி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சிறுபான்மையினர் மூலம் அரசு அதிகாரிகள் அச்சுறுத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி ஊழியர்களை சமாதானம் செய்வது வெட்கக்கேடான விஷயம்.

நகராட்சி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.என இந்துமுன்னணி அமைப்பு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version