ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.மாவட்டத்தில், முன்னோடித் தொழில் துறையினருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், நடைபெற்ற வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 2020/21 நிதியாண்டில் ரூ.2,484கோடி அளவிற்குக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயம் மற்றும் பயிர்க் கடனாக ரூ.2,334.98 கோடி அளவிற்கும், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ரூ.41.59 கோடியும், கல்விக் கடனாக ரூ.26 கோடியும், வீடு கட்டுவதற்கான கடனுதவியாக ரூ.31கோடியும், இதர முன்னுரிமைத் திட்டங்களுக்கு ரூ.41.08கோடி அளவிற்கும் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திரு.சிவகுமார், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் திரு.சிவகுமார், ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம் கூறுகையில், தொழிலை மேம்படுத்த வங்கிக் கடனுதவி பெற்ற தமக்கு, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார். இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவது மிகுந்த சிரமமான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. *

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு  பாடம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மீண்டது தாராவி : சென்னைக்கு பாடம்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் 1 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மகாராஷ்டிராவில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக விளங்கிய...

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

பிரதமர் நரேந்தி மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று வானொலி மூலம் (மன் கி பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றி...

காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள்  முன் மண்டியிட்டு கெஞ்சிய அரசு அதிகாரிகள் !

காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் முன் மண்டியிட்டு கெஞ்சிய அரசு அதிகாரிகள் !

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து...

நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல...

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம் ! ஆதாரங்கள் ஒரு வாரத்தில் தரப்படும்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம் ! ஆதாரங்கள் ஒரு வாரத்தில் தரப்படும்!

உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள்...

பகவத் கீதை மூலம் அமைதியை காணமுடியும் அமெரிக்க எம்.பி !

பகவத் கீதை மூலம் அமைதியை காணமுடியும் அமெரிக்க எம்.பி !

'அமெரிக்காவில், தற்போது மோசமான நிலையில் உள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா தற்போது தள்ளாடி கொண்டிருக்கிறது. ஒருபுறம் கொரானாவின் தாக்கம் மறுபுறம் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த...

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா! கேரள முதல்வர் பினராயி விஜயன் இவர் கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்...

பழுதான பைக்கால் மாட்டி கொண்ட பாவமன்னிப்பு பாதிரியார்! பைக் திருட்டு பாதிரியார் !

பழுதான பைக்கால் மாட்டி கொண்ட பாவமன்னிப்பு பாதிரியார்! பைக் திருட்டு பாதிரியார் !

மதுரையை அடுத்து தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ளது கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்ற தேவாலயம் இந்த தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல்.இவர் கடந்த 5...

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி  மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால் போராட்டம் என கூறி இந்து முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்து மக்களின் மனதினை புண்படுத்தும் வகையில்...

Page 320 of 396 1 319 320 321 396

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x