Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பகுஜன் சமஜ்வாதி கட்சி மாநில தலைவராகிறாரா ப.ரஞ்சித்! ஷாக்கான தி.மு.க திருமாவளவன்!

Oredesam by Oredesam
July 10, 2024
in செய்திகள், தமிழகம்
0
PA Ranjith, Armstrong

PA Ranjith, Armstrong

FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமஜ்வாதி கட்சி மாநில தலைவராகிறாரா ரஞ்சித்! ஷாக்கான தி.மு.க திருமாவளவன்!

தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் எனக் குரலெழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக நடந்துகொள்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரு அரசியல் தலைவர் படு கொலை நடக்கவில்லை. முதல் முறையாக அரசியல் தலைவர், தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் முன்பே கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை வேண்டும் என தெரிவித்தார்.

“பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?” என்று கேட்டிருந்தார்.

பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு சமூக தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும்
வந்துகொண்டிருக்கின்றன.இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகள் எழுப்பாத அளவுக்கு கடுமையாக பா.ரஞ்சித் கேள்விகளை எழுப்பியிருக்கிறாரே… ஏன் அவர் ஒரு வேளை பகுஜன் சமாஜ் கட்சியில் இணையப் போகிறாரா என்ற கேள்விகளும் சமூக தளங்களில் எழுப்பப்படுகின்றன.

இதுகுறித்து பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் இருவரையும் அறிந்த வடசென்னை பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.
“ஆம்ஸ்ட்ராங் இழப்பை பா.ரஞ்சித்தால் உள்ளபடியே தாங்க முடியவில்லை. நெடுநாட்களாக அவர் ஆம்ஸ்ட்ராங்கை அறிவார். பா.ரஞ்சித்தின் சொந்த அண்ணனான வழக்கறிஞர் பிரபு பகுஜன் சமாஜ் கட்சியில் பொறுப்பில் உள்ளார். அவர்தான் ரஞ்சித்தை ஆம்ஸ்ட்ராங்கிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘மெட்ராஸ்’ படப் பிடிப்பு சமயங்களில் ரஞ்சித்துக்கு ஆம்ஸ்ட்ராங் பெரும் உதவியாக இருந்தார். இதன் காரணமாகவும் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பாதை காரணமாகவும் அவர் மீது ரஞ்சித்துக்கு பெரும் மரியாதை உண்டு. ரஞ்சித்தின் நீலம் ஃபவுண்டேஷன் நிகழ்ச்சிகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டதுண்டு.இந்த பின்னணியில்தான் அவரால் ஆம்ஸ்ட்ராங் இழப்பை தாங்க முடியவில்லை. அதனால்தான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் வரை அமைதி காத்துவிட்டு திமுக அரசுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு ரஞ்சித்தின் நண்பர்கள் சிலர் அவரை அரசியலில் நேரடியாக ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.மேலும் சிலரோ ரஞ்சித்துக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். ‘சினிமாவில் இருந்து கொண்டு கருத்து அரசியல் செய்வது வேறு. களத்தில் இறங்கி கட்சி அரசியல் செய்வது வேறு.

எனவே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். பகுஜன் சமாஜ் கட்சி என்பது ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் காரணமாகத்தான் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சிக்கு தமிழகத் தலைமையை ஏற்குமாறு சிலர் தூண்டிவிடலாம். ஆனால் ஆம்ஸ்ட்ராங் வகித்த பொசிஷன் வேறு. உடனடியாக உணர்ச்சி மிகுதியில் எந்த முடிவும் எடுக்காதீர்கள்.

யோசித்து செய்யுங்கள்’ என்று பா.ரஞ்சித்துக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்” என்கிறார்கள் ரஞ்சித் வட்டாரத்தில் நடப்பதை அறிந்தவர்கள்.அதேநேரம், ரஞ்சித் நேரடி கட்சி அரசியலில் ஈடுபடுவது பற்றி தீவிரமான ஆலோசனையில் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இது திமுகவனுக்கும் திருமாவளவனுக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளதாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

April 22, 2022
தி.மு.க வின் ஆணிவேரை வெட்ட தயாராகும் அ.தி.மு.க பாஜக ! அச்சத்தில் அறிவாலயம்!

தி.மு.க வின் ஆணிவேரை வெட்ட தயாராகும் அ.தி.மு.க பாஜக ! அச்சத்தில் அறிவாலயம்!

August 11, 2020
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

August 21, 2021
SenthilBalaji-DMK

பாஜக பிரமுகரின் கடையை அடித்து உடைத்த திமுக பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 5பேரை தேடிவரும் காவல்துறை..

August 1, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x