பாஜக நிர்வாகி அஷ்வத்தாமனை பழி தீர்க்க ஏகப்பட்ட சதி வலைகள் பின்னப்பட்டு வருகிறது.

சீப்பு செந்தில் ஆகட்டும் , இப்போது இவர் டார் டார் ஆக கிழித்துக்கொண்டிருக்கும் திருமாவளவன் ஆகட்டும், அல்லது முன்பே இவர் சித்தாந்த ரீதியில் முட்டிய கலி. பூங்குன்றன் மற்றும் வீரமணி என அனைவரும் ஒன்று சேர்ந்து சில பல விஷயங்களை செய்துவருவதாக தெரிகிறது.

விசிக தரப்பிலிருந்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் கதையை முடியுங்கள் , தேவையான வழக்கு செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றெல்லாம் OPENஆகவே, சிறுத்தை குட்டிகளால் பகிரப்படுகிறது.

ஏனென்றால் , இந்த விஷயத்தில் திருமா மீது புகார் கொடுத்து வழக்கு போட்டதிலிருந்து, அவரை விவாதத்திற்கு அழைத்ததாகட்டும், அல்லது திருமாவிக்கு support பண்ண பா.சிதம்பரம் போன்றவர்களை கிண்டல் செய்து ஓட விட்டதாக இருக்கட்டும். நம்மவர்களே இந்த ‘மனு தர்ம’ விஷயத்தில் தயங்கியபோது , ஆரம்பம் முதலே , “திருமாவளவன் சொல்வது ‘பச்சை பொய்’ , அவர் சொல்வது போல “மனு தர்மத்தில் ” இல்லவே இல்லை….” என்று அடித்து சொன்னார். இப்போது திருமாவளவனும் அதை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டார் .

இதனால் தான், இவர் மீது புகார் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அத்தனை காவல்நிலையங்களிலும் கொடுக்க வேண்டும் என “விசிக பார்வேந்தன்” என்பவர் மூலம் ஏற்பாடு ஆகிறது. இது நடந்தது 25.10.2020.

ஆனால், அந்த புகார் தரப்படாமல் காக்க வைக்கப்படுகிறது. நிற்க….

சத்தியம் தொலைக்காட்சியில் 26-10-2020 அன்று பாஜக Vs விசிக – மோதலை தூண்டியது யார் என்ற தலைப்பில் விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கு அஷ்வத்தாமனிடம் அழைப்பு விடுக்கப்படுகிறது .

ஆனால் சொல்லப்பட்ட வன்னியரசு, ராமசுப்ரமணியம் உள்ளிட்ட Panel List ல் இல்லாத புதிய நபராக சுந்தரவள்ளி என்கிற பெண்மனியை சேர்த்து விளம்பரம் வெளியிட்டது சத்யம் தொலைக்காட்சி. தன்னிடம் சொல்லாமல் மறைமுகமாக அவர் பெயரை சேர்த்ததாலும்,அவர் சில நாட்களுக்கு முன்பு ராம ரவிக்குமார் அவர்களிடம் மிகவும் தரம் தாழ்ந்து பேசியதை குறிப்பிட்டு, “என் தகுதிக்கு அவருடன் எல்லாம் என்னால் விவாதம் செய்ய முடியாது” என மறுத்துவிட்டார் அஷ்வத்தாமன். அதனால் சத்யம் தொலைக்காட்சி அன்று விவாத நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு , அடுத்தநாள் ஏற்பாடு செய்தது. அதே தலைப்பு …அதே பங்கேற்பாளர்கள் , ஆனால் சுந்தர வள்ளி மட்டும் இல்லை…

இதில் யோசிக்க வேண்டிய விஷயம் . ‘அஷ்வத்தாமன் வரவில்லை’ என்ற ஒரு காரணத்திற்காக , ஒரு நாள் cancel செய்யப்பட்டு, மறுநாள் நடக்கிற விவாதத்திற்கு மற்ற பங்கேற்பாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். வன்னியரசு மட்டுமல்ல….ராமசுப்ரமணியமும் இந்த trap க்கு ஒத்துழைக்கிறார்.

அவரால் விவாதத்தில் வைக்கப்பட்ட அருவருப்பான வாதங்களை பார்த்தாலே தெரியும். ( அதற்கு சரியான செருப்படி அஷ்வத்தாமனால் அவருக்கு தரப்பட்டது என்பது வேறு விஷயம். )

ஆனால், வன்னியரசு-க்கு பதிலாக “கரொலின்” என்ற பெண்மனியை திடீரென விவாதத்தில் அமர வைக்கப்படுகிறார்.

இந்த பெண் ஏற்கனவே நெப்போலியன் என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார் என நாடாகமாடியவர். இந்த விபரம் சென்னை MHAA வழக்கறிஞர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பெண் இதுவரை விசிக சார்பாக விவாதங்களில் பங்கேற்றதும் இல்லை. அப்படி இருக்க அந்த பெண் திடீரென விவாதத்தில் பங்கேற்க வைத்தது ஏன் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். அவர் மூலம் ஒரு நாடகம் திட்டமிடப்பட்டு அதன்மூலம் அஷ்வத்தாமன் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய செய்யப்பட்ட திட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு , “பொம்பளையிடம் வீரத்தை காட்ட நான் என்ன திருமாவளவனா ” என்று அதிரடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார் அஷ்வத்தாமன். தனக்கான , trap செட் செய்தவர்களுக்கு BETTER LUCK NEXT TIME ,என்று தனது சமூகவலைதளங்களில் பதிவும் செய்துவிட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த விசிக கட்சியினர், தாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்த புகாரை தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தார் போல, அடுத்த நாள் 28.10/2020 , விசிக கட்சியினர் புகார் கொடுக்கின்றனர் . அதாவது , அவர்கள் திட்டம் பலித்திருந்தால் அந்த பெண்ணை வைத்து புகார் கொடுத்திருப்பார்கள்.

அதற்காக காத்திருந்து , திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால், புகாரில் எந்த முகாந்தரமும் இல்லாமல், தங்களது கட்சித்தலைவர் மீது சட்டப்படி புகார் கொடுத்ததையே புகாராக சொல்லி, காவல்துறையிடம் புகார் கொடுத்து வழக்கு பதிய வற்புறுத்தி வருகின்றனர். அதுவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், எங்கிருந்து வந்தது இங்கு வன்கொடுமை ?!

ஒரு தனி மனிதன் மீது தமிழகம் முழுதும் ஒரு கட்சியால் முன்னெடுக்கப்பட்டு புகார் அளிக்கப்படுகிறது .

இந்து தர்மத்தை காக்க போராடிவரும் அஷ்வத்தாமன் அவர்களுக்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய நேரம் இது.

ISupportAshvathaman

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்

Exit mobile version