Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைக்கும் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை.

Oredesam by Oredesam
October 21, 2024
in அரசியல்
0
மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைக்கும் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை.
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழக மக்களின் கவலைகளைப் போக்க,சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை மறந்துவிட்டு,கூட்டணி ஆட்சியில் அதிகாரம், முதல்வர் கனவு என அவசர அரசியல் கருத்துக்களை அள்ளி தெளித்து தான் ஒரு முற்போக்கு அரசியல்வாதி இல்லை என்பதை அண்ணன் திருமாவளவன் நிரூபித்து விட்டார்.

தமிழக அரசியல் களத்தில் சுயநல அரசியல் விளம்பரத்திற்கும், தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்கும் முன்னுரிமை அளித்து
செயல்படும் அரசியல் வியாபாரிகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது அனைவருக்கும் உருவாகியுள்ளது.

READ ALSO

காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !

பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.

எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தோம் என்பதை மறந்து,
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலில் தான் என் கட்சிப் பயணிக்கும் என் அரசியல் பாதை இருக்கும், என் இயக்கத்திற்காகவும், என் மக்களுக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து தமிழக மக்களின் உரிமைக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்றெல்லாம் கூக்குரல் இட்டு இன்று பாதையை மறந்த ஆடுகளாய், முதல்வர் கனவில் மிதந்து வருகிறார்கள்.

ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றார். சரண்டர் ஆனார். மீண்டும் நானே தமிழக முதல்வர் என்று கூறுகிறார். மற்றொருவர் இந்த உலகத்தில் நடக்காததை நடக்க முடியாததை மட்டுமே பேசி, மக்களை ஏமாற்றும் அரசியல் மேஜிக்வித்தையை ஒரு நடிகராக,இயக்குனராக சிறப்பாக திரைக்கதை அமைத்து, தான் தமிழக அரசியலில்
தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி விட்டோம் என்ற
மமதையில் தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லை என்று விதண்டாவாதமாக, பயங்கரவாதி போல் பேசுகிறார்.

யார் தமிழன்? யார் இந்தியன்? என்கிற புரிதல் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மட்டும் சரியாக விளங்காதது தமிழகத்தின் சாபக்கேடாக உள்ளது.

சாதி,மத,இன வேறுபாடு இன்றி,தமிழ் அன்னையின் மகனாக, தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, தாய்த்தமிழ் பயின்ற அனைவருமே தமிழன் தான். பாரத தாயின் தவப்புதல்வனாக இந்தியாவில் பிறந்து
எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன் தான் என்பதை அண்ணன் சீமான் புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் தொல் திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும்

பல ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த காப்பாளன் போல நடித்துக் கொண்டு,தமிழகத்தில் பிரிவினைவான அரசியல் செய்து, உலகத்தின் மாவீரனாக போற்றப்படும் அண்ணன் பிரபாகரனுடன் இலங்கை காடுகளில் துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே, விருந்து சாப்பிட்டேன் என்று கதை கதையாக, கண்டபடி பேசி, உலகெங்கும் கலெக்ஷன் செய்த அண்ணன் சீமான் அவர்களுக்கு யார் தமிழன் என்பதை பகுத்துக் கூற உரிமையும் இல்லை. அருகதையும் இல்லை.

தமிழர்களின் வாழ்வு சிறக்க தமிழகம் செழிக்க, தமிழ் கூறும் நல்லுலகத்தின் எதிர்கால இளைய தலைமுறை மாணவர்களை இளைஞர்களை நல்வழிப்படுத்தி வள்ளுவன் வழியில் அரசியல் செய்பவனே தமிழன் என்பதை அண்ணன் சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம் அண்ணன் சீமானின் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் இந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. சீமான் போன்ற பிரிவினைவாதிகள் தான் தமிழர் என்ற போர்வையில் தமிழகத்தை ஆளக்கூடாது என்ற கருத்தில் எனக்கு தெளிவு உண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன்னும் பின்னும் சென்னை ராஜதானி முதல் இன்று வரை தாய்மொழியில் வேற்றுமை இருந்தாலும், தமிழ் தமிழர் தமிழ்நாடு மேல் அக்கறை கொண்ட
தமிழர்கள் தான் ஆட்சி செய்தார்கள். இன்றும் தமிழர்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர்களை பிரிக்க முயலும் தமிழகத்தை அழிக்க முயலும் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.

கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொரு தலைவரும் முதல்வர் கனவு காண்பதில் தவறில்லை. கனவு கண்டவர் எல்லாம் முதல்வர் ஆனதும் இல்லை. இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால் டீக்கடையில் வேலை செய்தவர்களும் ஆட்டோ ஓட்டியவர்களும்,பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களும் மத்திய,மாநில அமைச்சர்களாக, முதல்வராக பிரதமராகவும் மக்கள் கடமையை ஆற்றிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் யாருமே முதல்வராக வேண்டும் என்று கனவு காணவில்லை. திட்டமிடவில்லை. தங்கள் பணியை செய்தார்கள்.கடவுள் அருளால் மக்கள் கடமையை சிறப்பாக ஆற்றிய அனைவரையுமே, தமிழக, இந்திய மக்கள் எட்ட முடியாத உயரத்தில் வைத்து அழகு பார்த்தனர். பார்க்கின்றனர்.

அதேசமயம் சுயநல அரசியல் , பிரிவினைவாத அரசியல் ஊழல் அரசியல், மதவாத அரசியல் செய்தவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சியை இழந்து சிறையிலும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே மக்கள் விரோத திமுக ஆட்சியில் தற்பொழுது தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த கொடிய சூழ்நிலையில், ஊழலாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் தமிழக மக்கள் கடும் மனவேதனையில் துன்பப்படும் நேரத்தில் தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்கும் விதத்தில், மக்களை இணைக்கும் வகையில் விழிப்புணர்வை உருவாக்கி, ஆக்கபூர்வமான நேர்மறை அரசியலை முன்னெடுத்து,சுயநல அரசியல், பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வான்புகழ் தந்த வள்ளுவனின் திருக்குறள் வழியில், அரசியல் நெறியில் ஒன்றிணைந்து மக்கள் பணியாற்றுவோம்.

என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

Annamalai
அரசியல்

காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !

June 30, 2025
Annamalai
அரசியல்

பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.

June 18, 2025
Annamalai
அரசியல்

மருத்துவர்கள் விஷயத்திலும் பொய் கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்.

June 11, 2025
Annamalai IPS
அரசியல்

தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க இதை செய்யவேண்டும் அண்ணாமலை கோரிக்கை !

June 11, 2025
ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !
அரசியல்

திமுக சொல்லும் வசனங்களை எழுதாவிட்டால் நீதிபதிகள் மீது ஜாதி சாயம் பூசுவதா-டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் !

May 22, 2025
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தனுசு குரு பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி 2024 : தனுசு ராசிக்காரர்களுக்குமுயற்சிகள் வெற்றியாகும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.

மோடியின் அஸ்திரம் ! உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் போரில் ஏற்பட்ட தலைகீழமாற்றம்…

September 19, 2024
காஷ்மீர் மசூதியில் தொழுகை நடத்திய திராவிட ஹலோ போட்டோ எங்கே? தருமபுரி எம்.பி. செந்தில்குமாரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

காஷ்மீர் மசூதியில் தொழுகை நடத்திய திராவிட ஹலோ போட்டோ எங்கே? தருமபுரி எம்.பி. செந்தில்குமாரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

September 10, 2021
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

இது தாங்க மக்கள் ஆட்சி! மக்களே தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் பத்ம விருதுக்கு தகுதியுள்ளவர்களை! பிரதமர் மோடி வேண்டுகோள்!

July 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x