Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை குறிவைத்து நகர்த்திய காய்களை தவற விட்ட நியூஸ் 18….

Oredesam by Oredesam
December 20, 2020
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பயிரை விட “களைகள்” அதிகம் – நியூஸ் 18 பரிதாபங்கள் ..தமிழக தொலைக்காட்சி வானில், குறுகிய காலத்திலேயே தனது சேனலுக்கென்று ஒரு தரமான இடத்தை பிடித்தது நியூஸ் 18.  தொழில்நுட்பம், ஒலி, ஒளி, மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம் ஆகியவற்றின் மூலம் செய்தி சேனல்களின் வரிசையில் முன்னணி இடத்தை நியூஸ்18 விரைவிலேயே கைப்பற்றியது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

ஆனால் அதே சமயம், உடன் பிறந்தே கொல்லும் நோய் போல, உள்ளிருந்து மரத்தை அழித்துவிடும் செல்கள் போல, நியூஸ் 18 சேனலில் பணிபுரியும் ஒரு சில செய்தியாளர்கள், ஒரு தரமான சேனலின் மதிப்பை மெல்ல மெல்ல இழக்கச் செய்துவரும் சில செயல்களை பார்க்கும்போது உண்மையிலேயே பரிதாபமாக உள்ளது.

பாஜக கட்சியையும் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக சமூக வலைத்தளங்களில் பல போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  ஊட்டி மலை ரயிலில் காண்ட்ராக்ட் மூலம் தனியார் ரயில்கள் விடப்படுவது வழக்கம் தான். 

தனியார் காண்ட்ராக்ட் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை, ரயில் கட்டண விலையாக வேண்டுமென்றே திரித்து, ஒரு சில செய்திகள் சமூக வலைதளங்களில் விஷமிகள் மூலம் பரப்பப்பட்டன.  ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு இந்த வதந்தி எடுத்துச்செல்லப்பட்ட உடன், உண்மை நிலையை ரயில்வே துறை விளக்கியது.இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு நியூஸ்18 தொலைக்காட்சியின் நிருபர், பாஜக தலைவர் ஹெச் ராஜா அவர்களிடம் இந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கேள்வி கேட்கிறார். “3000 ரூபாய் ரயில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள், ஏன் ஊட்டி செல்ல வேண்டும்? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி கேட்டிருக்கிறாரே” என்பதுதான் அந்தக் கேள்வி.  இது மேலே குறிப்பிடப்பட்ட பொய் செய்தியின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி.

ஒரு தொலைக்காட்சி சேனலில் தரம் எவ்வளவு தாழ்ந்து வருகிறது என்பதற்கு இந்த நிருபரின் கேள்வி ஒரு உதாரணமாகவே திகழ்கிறது.ஆளும் கட்சியை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய முக்கியமான கடமை பத்திரிகை துறைக்கும், ஊடகத் துறைக்கு உள்ளது.  இந்திய தேசத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் மிதித்து, அதிகாரத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.   அந்த நிலையில் கூட பிரதமரை எதிர்த்து சோ ராமசாமி, அருண்ஷோரி, எஸ் குருமூர்த்தி ஆகியோர் இந்திரா காந்தியை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதினர்.  அறிவு என்ற பேனா முனையில், சத்தியம் என்ற மையை ஊற்றி எழுதிய அந்த கட்டுரைகளில், ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பைப் போல அரசை சுட்டன.  ஆனால் இந்திரா காந்தியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த இடத்திலும் பொய் என்னும் சாக்கடையில்  இந்த பத்திரிகையாளர்கள் இறங்கவில்லை.  திக, திமுக ஆகியவற்றின் ஆதிகால சரித்திரத்தை எடுத்துச் சொல்லி இந்த தீயசக்திகளின் உண்மை முகத்தை, மக்களிடம் எடுத்துச் சென்றவர் திராவிடமாயை சுப்பு. இந்தக் கட்டுரைகள் துக்ளக் நாளிதழில் வெளிவந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.  எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்களை என்றுமே துணைக்கு அழைத்ததில்லை திராவிட மாயை சுப்பு.  அதனால்தான் இன்னும் எழுத்தாளர் உலகில் ஜாம்பவானாக சுப்பு மதிக்கப்படுகிறார்.
மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொய்களை அஸ்திவாரமாக கொண்டு இயங்கும் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களும், தனது மதிப்பை இழக்கிறார்கள்.சத்யமேவ ஜெயதே என்பது வேத வாக்கியம். அதுவே நமது இந்திய மண்ணின் கௌரவம். சத்தியத்தை மீறி கிடைக்கும் வெற்றிகள் என்றைக்குமே நிலைப்பதில்லை.பொய்யான செய்திகளை நம்பி அதையே கேள்வியாக கேட்ட நிருபரை நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனம் பணி நீக்கம் செய்து விட்டதாக செய்திகள் கசிந்து வருகின்றன.  இது உண்மை என்றால், அந்த நிருபரை சரியான வழியில் நடத்த தவறிய தலைமை நிருபர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?உண்மை நிலை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சில தொலைக்காட்சி சேனல்களில் பணி புரியும் ஒரு சிலர், சம்பளத்தை சேனலில் பெற்றுக்கொள்கிறார்கள்.  அதேசமயம் ஒரு சில கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்கும்,  ஒரு சில கட்சிகளுக்கு எதிர்ப்பு நிலையை எடுப்பதற்காகவும் தனிப்பட்ட முறையில் கையூட்டு பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் வெளிவந்த திரைப்படம் அன்பே வா.  அதில் முதலாளி சிம்லாவில் கட்டிவைத்த கெஸ்ட் ஹவுஸ் அறைகளை, சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு, அதன் காப்பாளர் சம்பாதிக்கிறார்.  அதேபோல யாரோ கோடிக்கணக்கில் முதலீடு செய்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சிலர், தங்களது சொந்த லாபத்திற்காக தொலைக்காட்சி நிறுவனத்தை ஒரு கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.நெற்பயிர் விளையும் போது களைகளும் இருக்கும்.  ஒழுங்காக பராமரிக்க தவறினால் பயிரை விட களைகள் மிகுந்து விடும்.  தமிழக தொலைக்காட்சி சேனல்கள், இது போன்றதொரு இக்கட்டான சூழலில்தான் தற்போது உள்ளன.  தவறு செய்த ஓரிரு நிருபர்களை பணிநீக்கம் செய்வதன்மூலம் இந்த நோயிலிருந்து விடுபட முடியாது.  முழுவதுமாக களை எடுக்கப்பட வேண்டும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று யார் தவறு செய்தாலும் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும்.  எந்த நேரத்திலும் உண்மை என்பதை விட்டு விலகக் கூடாது.நியூஸ்18 நிறுவனம் மீது நம்பிக்கை உள்ளது.  – பத்மநாபன் நாகராஜன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும் – எடியூரப்பா நம்பிக்கை…

May 1, 2022

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி படுகாயம் அடைந்து, கவலைக்கிடம் 11 உயிரிழப்பு ?

December 8, 2021
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

August 7, 2020
அண்ணாமலை

ஓங்கோலிலிருந்து வந்தவர் எல்லாம் தமிழரானால் பிரதமர் மோடியும் தமிழர்தான்!தி.மு.கவை பங்கம் செய்த அண்ணாமலை

January 6, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x