பாஜகவின் உத்திரபிரதேச வெற்றி எதையெல்லாம் சாதித்து இருக்கிறது ?

உள்ளூரிலே இருந்து உலக அளவிலே எல்லாரையும் பம்மிக்கொண்டு இருக்க வைத்திருக்கிறது. மொதல்ல வந்து நின்னது சீன கம்மினிஸ்டு கம்மானாட்டிகள். திரும்பவும் பேச்சுவார்த்தைய ஆரம்பிப்போம்பொருளாதார நல்லுறவு ஏற்படுத்துவோம் சீனா இந்தியா இடையே நாகரீகங்களுக்கான நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்துவோம் சீனா இந்தியா இடையே பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம் என வந்து நின்றிருக்கிறார்கள்.

கவனிங்க நாகரீகங்களுக்கு இடையே நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்துவோம் என வந்திருக்கிறார்கள். போன வாரம் வரைக்கும் கொதித்து கொந்தளித்துக்கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சரி பெட்ரோல் தானே வாங்கிக்கோங்க. ஒரு நாலு ஏவுகணை தானே? பரவாயில்லை இருந்துட்டு போவட்டும்.

என்ன ஒரு ஏவுகணையை பக்கத்துல பாக்கிக மேலே போட்டு பாத்துட்டீங்களா? சரி சரி இனிமே முறையா சொல்லிட்டு செய்ங்க. அப்படீன்ற வகைக்கு வந்து நின்னாச்சு. நேத்து வந்த ஜப்பான் பிரதமர், ஒரிஜினல் ஜப்பானோட ஒரிஜினல் பிரதமருங்க. இங்க இருக்கற ஜப்பான் துணைப்பிரதமர் இல்லே. அந்த ஜப்பான் பிரதமர் அடுத்த மூன்று வருடங்களிலே மூன்றரை லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்.

மர்ம மத நாடுகள் மட்டும் இருக்கும் அமைப்பு நம்முடைய நாட்டு உள்விவகாரங்களிலே தலையிட குழு அமைப்போம் என சொன்னதுக்கு பக்கத்து நாடுகள் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளும் போகல. பின்னே பாமாயில் பிரச்சினையிலே அடிவாங்கினது எப்பவும் நினைப்பு இருக்குமில்ல. சீனா வணிகமுமே பார்த்தா நாம இங்கே தயாரிக்க முடியவே முடியாது அல்லது உடனடியா முடியாது என சொல்வதை மட்டும் தான் வாங்குகிறோம்.

பாஜகவை ஒரு கை பார்த்துவிடுவோம் என இறங்கின அமெரிக்க வெடியல் பைடனார் நிலை தான் கவனிக்க வேண்டியது. போன வருடம் பதவியேற்றவுடனே மோடி கொஞ்சம் கஷ்டப்படட்டும் என மருந்து தயாரிக்கவேண்டிய மூலப்பொருட்களை நிறுத்தி வைத்திருந்தது ஞாபகம் இருக்கிறதா? அமெரிக்கா போனதற்கு இந்த லிபரல்கள் பாசமிகு சிட்டீ கம்மாலா ஆரீஸ் என்னென்னா பேசியது? ஆகா ஓகோ கம்மாலா ஆரீஸ் மிகப்பெரும் வீராங்கனை என நம்மூர் ஆட்கள் பயர் விட்டது ஞாபகம் இருக்கிறதா?

இப்போது பைடனாரே வலிய வந்து பேசுகிறார். ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் எல்லாம் தெரிவிக்க முடியாது என சொன்னபின்பும் சரி தேர்தல் முடிவு வரட்டும் என இருந்தாங்க. இப்போ சரி நீங்களா பார்த்து ஏதாச்சும் செய்ங்க என்ற நிலைக்கு வந்து நின்றிருக்கிறாங்க. போதாக்குறைக்கு ஈரானும் வேண்டுமளவுக்கு கச்சா பெட்ரோலியம் தருவதாக சொல்லியிருக்கிறது. வரும் ஒன்றிரண்டு மாதங்களிலே பல முடிவுகளை மோடி அவர்கள் எடுக்க நேரிடும். உள்ளூர் பிரச்சினை ஏதும் இல்லை என்பதால் தகிரியமாக எடுப்பார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அவர்களுக்கு ராஜஸ்தானிலே இருக்கும் சூரூ ஊரிலே செய்யப்படும் கிருஷ்ண விசிறியை பரிசளித்திருக்கிறார் நமது பிரதமர் மோடி அவர்கள். இந்த கிருஷ்ண விசிறியானது சந்தனமரத்திலே பல கலை நுணுக்கங்களோடு செய்யப்பட்டு கிருஷ்ணரின் பல வடிவங்களை கொண்டிருக்கும்.

படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள். முன்பெல்லாம் என்ன பரிசு கொடுப்பார்கள் என நினைத்து பாருங்கள். உள்ளூருக்கு வருவோம். நமது பிராந்திய மனநலம் குன்றிய வெடியலிலே இருந்து வடக்கே , கிழக்கே, மேற்கே என எல்லா எதிரி கட்சிகளும் அடக்கி வாசிக்கிறதுகள். மகாராஷ்ராவின் மகா விநாச அங்காடியானது எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலையிலே இருக்கீறது. நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் எப்படி நாட்டின் முன்னேற்றத்தை கொண்டு வருது என பாருங்கள். இந்த முன்னேறத்தை கொண்டு வந்த அனைத்து பான்பராக், பீடா, பானிபூரி வாயன்களுக்கும் கோடி கோடி வணக்கங்கள்.

கட்டுரை :-ராஜசங்கர் விஸ்வநாதன்.

Exit mobile version