மாஸ் காட்டும் பா.ஜ.க மாநில செயலாளர் வினோஜ் செல்வம்! 1008 பூத்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி!

Vinoj Selvam

Vinoj Selvam

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது,பல்வேறு பொதுக்கூட்டங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள்,கட்சி நிகழ்ச்சிகள் பூத் கமிட்டி அமைப்பது,தேசிய நிகழ்ச்சிகள் மாநில தலைவர் நடைபயணம் என ஒரு அலுவலகம் போல் அதிரடியாக வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள், தமிழகத்தில் மோடிக்கு எதிரான பிம்பம்இல்லை , அதிமுக ஆட்சியில் இருந்தபோது எதிர்த்து அரசியலை செய்யமுடியாமல் இருந்தது, தமிழக பாஜக தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டது,அதன் பின் மாற்று கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த பிரபலங்கள் பிராமண கட்சி தோற்றம் உடைப்பு என பல வேலைகளை செய்து வந்தது பாஜக. இந்த நிலையில் தான் அதிரடியாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். இதனால் பாஜகவின் வளர்ச்சியின் வேகம் இன்னும் சூடு பிடித்து.

பா.ஜ.கவின் சித்தாந்தத்துக்கு எதிரான கட்சி திமுக ஆட்சியில் இருப்பதால் பா.ஜ.கவின் அரசியல் இன்னும் எளிமையானது. திமுக செய்யும் தவறுகளை தினமும் சுட்டிக்காட்டி திமுகவிற்கு எதிரான கட்சி பா.ஜ.க தான் என பேசவைத்துள்ளார் அண்ணாமலை. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வேல்யாத்திரை மூலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்த தமிழக பாஜக அண்ணாமலையின் அதிரடி அரசியலால் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக மாநில செயலாளரும் விழுப்புரம் பெருங்கோட்டத்தின் பொறுப்பாளருமான வினோஜ் செல்வம் 1008 பூத்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர்‌ காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு விழுப்புரம்‌மற்றும்‌ கடலூர்‌ ஆகிய வருவாய்‌ மாவட்டங்களில்‌ உள்ள 9497 வாக்குச்சாவடிகளில்‌, 6094 வாக்குச்சாவடிகளில்‌ பூத்‌ கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அமைக்கப்படாத பாஜகவிற்கு சவாலான எஞ்சிய 3403 வாக்குச்சாவடிகளில்‌ புதியதாக 1008 பூத் கமிட்டி அமைக்க பெற்று அந்ததந்த பூத்களில் கொடி கம்பம் நிறுவி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து மாஸ் காட்டி வருகிறார் வினோஜ் ப செல்வம்!

இது குறித்து வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில்‌ ஓர்‌ அரசியல்‌ மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மாண்புமிகு பாரத பிரதமர்‌ இரு நரேந்திர மோடி அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌, மாநிலத்‌ தலைவர்‌ இரு அண்ணாமலை அவர்களின்‌ தலைமையில்‌புரவிப்பாய்ச்சலில்‌ சென்று கொண்டிருக்கும்‌ இந்த காலகட்டத்தில்‌, தமிழகத்தில்‌பாஜக ஏற்கனவே தடம்‌ பஇத்த கொங்கு மற்றும்‌ தென்‌ மாவட்டங்களை தாண்டி தற்பொழுது பாஜகவிற்கு சவாலான பகுதிகள்‌ என அறியப்பட்ட சென்னை சுற்று வட்டார மாவட்டங்களிலும்‌ ஆழமாக வேர்‌ விட்டு வளரத்‌ துவங்கி உள்ளது

ஏனெனில்‌ 1957 ஆம்‌ ஆண்டு இமுக முதன்‌ முதலில்‌ போட்டியிட்ட தேர்தலில்‌ 112 இடங்களில்‌ போட்டியிட்டு 15 இடங்களில்‌ வெற்றி பெற்றது. அதில்‌ சென்னை,செங்கல்பட்டு, வடஆற்காடு தென்னார்க்காடு மாவட்டங்களில்‌ மட்டுமே 12 தொகுதிகளில்‌ வெற்றி பெற்றது. திராவிட சித்தாந்ததில் மூழ்கி போயிருந்த இந்தப்‌ பகுதிகளில்‌ தேசிய இந்தனை மெல்ல வலுப்பெற்று வருஇறது.

அதன்‌ சாட்சியாக பாஜக அமைப்பு ரீதியான விழுப்புரம்‌பெருங்கோட்டத்துற்குட்பட்ட திருவள்ளூர்‌ காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு விழுப்புரம்‌மற்றும்‌ கடலூர்‌ ஆகிய வருவாய்‌ மாவட்டங்களில்‌ உள்ள 9497 வாக்குச்சாவடிகளில்‌ பாஜக காரிய கருத்தர்களின்‌ கண்துஞ்சா பணிகளின்‌ காரணமாக ஏற்கனவே, 6094 வாக்குச்சாவடிகளில்‌ பூத்‌ கமிட்டி அமைக்கும்‌ பணிகள்‌ நிறைவு பெற்று கட்சிபணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

மேலும்‌, பாஜக அமைப்பு இது வரை இல்லாத 3403 வாக்குச்சாவடிகளில்‌ கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும்‌ பூத்‌ வலிமைப்படுத்தும்‌ இயக்க பணிகளின்‌மூலமாக புதியதாக 1008 பூத்கள்‌ இந்த பகுதிகளில்‌ கட்சி அமைப்புகளில்‌ கொண்டுவரப்பட்டு அந்த பூத்துகளில்‌ பூத்‌ கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை சாதித்து காட்டிய அத்தனை காரியத்தர்களுக்கும்‌ பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடுசார்பில்‌ பாராட்டுக்கள்‌.

புதியதாக கட்சி அமைப்பில்‌ இணைக்கப்பட்டுள்ள 1008 பூத்களிலும்‌, பூத்‌கமிட்டிகள்‌ அமைக்கப்பட்டிருப்பதை கொண்டாடும்‌ வகையில்‌, புதியதாக இணைக்கப்பட்டுள்ள 1008 பூத்களிலும்‌ 1008 கொடிக்கம்பங்களில்‌ பா.ஜ.க கொடியேற்றும்‌ நிகழ்வு வருகின்ற ஆகஸ்ட்‌ 25ஆம்‌ தேது காலை 10 மணி அளவில்‌ அனைத்து பூத்களிலும்‌ ஒரே நேரத்தில் நடைபெற இருக்கிறது. இதனை மரியாதைக்குரிய மாறிலத்‌ தலைவர்‌ திரு அண்ணாமலை அவர்கள்‌
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவளம்‌ பகுதயில்‌ முதல்‌ கொடியை
ஏற்றி துவக்கு வைக்கிறார்கள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version