சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர்!…

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் உதயநிதிக்கு அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த முதல்வர் அடுத்த தலைவர் என அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை ஐஸ் வைத்து வருகின்றார்கள். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதை சட்டசபையில் கூட கண்கூடாக தெரிந்தது,மேலும் உதயநிதி அரசியலுக்கு வரும் போதிலிருந்தே பேனர்களில் கருணாநிதிக்கு பதிலாக உதயநிதியின் புகைப்படம் இடம் பெற்றது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட வாரியாக தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. ‘திராவிடத் திருவிழா’ என்ற பெயரில் மாவட்டந்தோறும் உதயநிதி சுற்றுப்பயணம் செல்கிறார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, தஞ்சாவூருக்கு சென்ற உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில்,தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ‘டொபுக்’கென விழுந்து வணங்கிய ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, தஞ்சாவூருக்கு சென்ற உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், மேயர் அங்கி அணிந்திருந்த நிலையில், திடீரென உதயநிதி காலில் ‘டொபுக்’கென விழுந்து வணங்கினார்.

இந்த வீடியோ பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேயர் பதவி மற்றும் மேயர் நாற்காலி, அங்கி உடை, செங்கோல் போன்றவைக்கு பராரம்பரிய மரியாதையும், மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேயர் அங்கி உடை அணிந்த வண்ணம், உதயநிதி காலில் விழுந்து மேயர் வணங்கியதால், வணக்கத்துக்குரிய மேயரின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில், மேயர் காலில் விழும் கலாசாராத்தை ஊக்குவிக்கலாமா; இது தான் சமூக நீதியா; சமத்துவமா என்ற கேள்விகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பலரும் தி.மு.க.,வை வறுத்தெடுக்கின்றனர்.மேலும், மேயர் ராமநாதன் உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version