Friday, May 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா ? எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர் ? பாஜக நிர்வாகி கேள்வி !

Oredesam by Oredesam
November 7, 2024
in அரசியல்
0
250 கோடி ரூபாய் செலவு செய்து தீபாவளி கொண்டாடிய திமுக-பாஜக நிர்வாகி ஆவேசம்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் A.N.S. பிரசாந்த் அறிக்கை ஒன்று நீ வெளியிட்டுள்ளார்.அதில்,டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்?

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அவர்கள், “கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர்.

READ ALSO

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

ஏமாற்றிய ஸ்டாலின்…ஆதராத்தோடு அண்ணாமலை போட்ட போடு.. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம்!

கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள். அவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர்” என்று நீதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார்.

இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம் மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதை தான் ஆரிய – திராவிட இனவாதம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று கூறியிருக்கிறார். இதை வசதியாக மறைத்துவிட்டு ஆராசா போன்றவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அனைவரும்,தங்களை ‘இந்துக்களாக உணர்ந்தால்’ ஜாதி வேறுபாடுகள் அறவே ஒழியும். அதற்கான முயற்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனங்களில் இருந்து ஜாதி வேறுபாடுகளை களைய ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் ஆற்றிய பணிகளை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதி வேறுபாடுகளை களைய, மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த களப்பணியாற்றி வருகிறது. அதற்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த தேவரஸ் அவர்கள், ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால், இந்த உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று கூறியிருக்கிறார். இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை இதைவிட யாரும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட முடியாது.

ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்ப அரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இது போன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.

இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவு சொல்லாக கருதும் ‘பார்ப்பான்’ என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதுகின்றனர்.

அவர்கள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுக்க வந்தவர்களையே விரட்டியடிக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதனால்தான், பிராமணர்கள் தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டண உயர்வால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் என்று அனைத்தும் உயர்ந்து விட்டன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் ‘இனவாத அரசியலை’ திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அவர்களின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆராசா கூறுகிறார். ‘அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது உண்மையானால் ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசா அவர்களால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா? பெரம்பலூர் பொது தொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத் தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இது பிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை.

‘தந்தை – மகன் – பேரன்’ என்று கட்சி தலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது.என அவர் கூறி உள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025
Annamalai
அரசியல்

ஏமாற்றிய ஸ்டாலின்…ஆதராத்தோடு அண்ணாமலை போட்ட போடு.. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம்!

May 2, 2025
annamalai stalin
அரசியல்

ஸ்டாலின் கழுத்துக்கு மேல் கத்தி பொன்முடி,செந்தில்பாலாஜி பதவி பறிப்பு ! அண்ணாமலை ஆவேசம் !

April 28, 2025
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்
அரசியல்

திறனற்ற திமுக அரசின் ஆட்சியில் முக்கிய மருத்துவமனைகளின் அவலநிலை அண்ணாமலை போட்ட ட்விட் !

April 23, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
அரசியல்

சவூதி அரேபியா பயணத்தையொட்டி பாரத பிரதமரின் அறிக்கை

April 22, 2025
Annamalai
அரசியல்

ராஜ்யசபா எம்பி.. மத்திய கேபினட் அமைச்சர்.. தேசிய பொது செயலாளர் அண்ணாமலையை தேடி வரும் பதவி..! இன்னும் 10 நாட்களில் முடிவு!

April 22, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கஞ்சா கடத்திய முகமது அனீபவை பிடிக்க காரின் பேனட்டில் தொங்கிய காவலர் சரவணன் படுகாயம்! சினிமாவை மிஞ்சிய அதிரடி!

கஞ்சா கடத்திய முகமது அனீபவை பிடிக்க காரின் பேனட்டில் தொங்கிய காவலர் சரவணன் படுகாயம்! சினிமாவை மிஞ்சிய அதிரடி!

July 27, 2021
உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

July 24, 2021
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

திமுகவுக்கு இடியை இறக்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. தி.மு.க. புள்ளி செய்யது இப்ராஹிம் சொத்துக்களை முடக்கம் செய்தது ..

March 15, 2025
கொரோனாவை விரட்ட கண்ட வரச்சொல்லுங்க!ஆஸ்திரேலியாவுக்கு யோகியை கையோடு கூட்டி வாருங்கள்! ஆஸ்திரேலிய MP க்ரெய்க் கெல்லி!

கொரோனாவை விரட்ட கண்ட வரச்சொல்லுங்க!ஆஸ்திரேலியாவுக்கு யோகியை கையோடு கூட்டி வாருங்கள்! ஆஸ்திரேலிய MP க்ரெய்க் கெல்லி!

July 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x