Get real time update about this post category directly on your device, subscribe now.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 17,37,539 முகாம்களில் 11,99,37,641 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 91-வது நாளான நேற்று (ஏப்ரல் 16, 2021), நாடு முழுவதும் 30,04,544 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.32 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,729 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,360 பேரும், தில்லியில் 19,486 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 16,79,740 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 11.56 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக (87.23%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய தொழில்துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு செயல்திறன் மற்றும் உணர்வுபூர்வமான அணுகுமுறையை பின்பற்ற, 8 ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு, ஒரு குறிப்பிடத்தக்க முடிவை மத்திய...
ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மற்றும் மலைப் பிரதேசங்களிலும், மாஹே மற்றும் கர்நாடகாவின் கடலோர மற்றும் தெற்கு பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று...
முன்பு கரோனாவின் அறிகுறிகள் : காய்ச்சல்மூச்சு விடுவதில் சிரமம்வரட்டு இருமல்வாசனை சுவை இல்லாமல் போவது GB தற்போதைய கரோனாவின் அறிகுறிகள் : .பின் கழுத்து வலி கண்கள்...
இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 10,45,28,565 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திருவிழாவில் முதல்நாளான நேற்று சுமார் 30 லட்சம் (29,33,418 ) தடுப்பூசிகள் போடப்பட்டன. தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவற்றின் தினசரி சராசரி 40,55,055 டோஸ்களாக உள்ளன. நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,68,912 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 83.02 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 12,01,009-ஐ எட்டியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,21,56,529-ஆக உள்ளது. இவர்கள் எண்ணிக்கை 89.86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் இறந்துள்ளனர்.
தேவைக்கேற்ப , ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ...
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம்...
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த...
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்: உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர். உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை குடியரசுத் தலைவர்...
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாஎனது சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடப்படவில்லை என பேசிய திமுக எம்.பி கனிமொழி, எந்த இடத்தில் சாலை போடப்படவில்லை என்பதை...
