Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய குறுக்கீடு தேவையற்றது: குடியரசு துணைத் தலைவர்

Oredesam by Oredesam
April 10, 2021
in இந்தியா, செய்திகள்
0
இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும், அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து தீர்ப்பதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.  இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும்  தேவையற்றது என அவர் கூறினார்.

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

ஜம்மு ஐஐஎம்-ன் 3வது மற்றும் நான்காவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியதாவது:

ஐஐஎம் ஜம்மு போன்ற தேசிய உயர்க் கல்வி மையங்கள்,  புதிய சந்தைகளின் நிலவரம், 4வது தொழில்புரட்சியின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புதுமையான படிப்புகள் மற்றும் டிப்ளமோக்களை வழங்க வேண்டும்.

உலக நிலவரத்துக்கு  ஏற்ப உயர் கல்வி மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த படிப்புகள் மூலமாக வேளாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பம், மானுடவியல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும். இதுதான் புதியக் கல்வி கொள்கையின் பன்முக உந்துதல்.

கடந்த காலத்தின் மேலோட்ட அணுகுமுறையால், எதிர்கால பிரச்னைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புதுமையை ஊக்குவிக்கும் மனநிலையை உருவாக்குவது முக்கியம்.

கல்வி நிறுவனங்களின் சீர்திருத்தம் மாணவர்களிடையே படைப்பாற்றலை  வளர்க்க வேண்டும்,  சிறப்பம்சத்தை ஊக்குவிக்க வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப, எதிர்காலத்தில் மேலாண்மை மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.

நிச்சயமற்ற உலகில் உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப உங்களின் சுறுசுறுப்பு ஆகியவை மிக முக்கியமானது.

கற்றல் உலகமும் பணியாற்றும் உலகமும் வேகமாக மாறிக் கொண்டிருப்பதால், எதிர்கால சவால்களை எதிர் கொள்வதில், கல்வி நிறுவனங்கள் சுறுசுறுப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மனித இனம் இதுவரை சந்திக்காத சூழல்களுக்கு ஏற்ப மாறவும், பதிலளிக்கவும் உயர் கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள், மேலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள், புதுமைகளை அடிமட்ட அளவில் அடையாளம் காண வேண்டும். எல்லாவற்றுக்கு உள்நாட்டில் தீர்வு காணும் வகையில் தங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்த வேண்டும்.  நமது கைவினை கலைஞர்களின் பாரம்பரிய திறமைகளை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு உதவி செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

விவசாய பொருட்கள் விற்பனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில், பட்டம் பெறும் மேலாண்மை மாணவர்கள் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இ-நாம் சிறந்த உபகரணம். இதை மேலும் மேம்படுத்த வேண்டும். அறுவடைக்கு பிந்தைய வசதிகளில், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும்.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற, இந்தியா, சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இளைஞர்கள் தான் நமது நாட்டின் மிகப் பெரிய வளம் மற்றும் கூட்டாளி.  அதிகளவிலான மக்கள் தொகையை கொண்டிருப்பதால், எதையும் சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

திறன் மேம்பாடு, தரமான கல்வி ஆகியவை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அதனால் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் -கல்வி நிறுவனங்கள் இடையிலான இணைப்பை  மேலும் வலுப்படுத்த வேண்டும்.  உலகின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமே, மாணவர்கள் தங்கள் பாடங்களின் அடிப்படையில் திறமையானவர்களாக மாற முடியும்.  இளம் மாணவர்களின் புதிய கண்ணோட்டங்களால், நமது தொழில்துறையும் வெகுவாக பயனடையும்.

கல்வியை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் தேவையையும், ஆற்றலையும், கொவிட் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது.

அதனால் தொழில்நுட்ப  உபகரணங்களை இன்னும் விவேகமாக பயன்படுத்த வேண்டும். தொலைதூர பகுதிகளில் உள்ள பின்தங்கிய மாணவர்களும், இந்த தொழில்நுட்ப புரட்சியால் பயனடைய செய்ய வேண்டும். 

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

‘சொந்த வாகனம் இல்லை’ – யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு ரூ.1.54 கோடி…

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.

March 8, 2022
உக்ரைன் அதிபருடன் பாரத பிரதமர் சந்திப்பு !

மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொன்ன உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ! மோடியால் மட்டுமே சாத்தியம் இதுதான் பவர் !

November 2, 2024
நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

April 27, 2020
Annamalai

கடலில் பேனா சிலை வைக்க பணம் உள்ளது.. மேட்டூர் அணையை தூர்வார பணம் இல்லையா? -அண்ணாமலை

January 9, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x