Get real time update about this post category directly on your device, subscribe now.
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது முறையாக தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவராக வினோஜ் செல்வம் பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. கருப்பர் கூட்டத்தின் மீது முதல் புகார் அளித்து விசயத்தை...
குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்தினார் பொன்னார் நீட் தேர்வில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் குமரி மாவட்ட...
தமிழகத்தில் பாஜக இளைஞரணி களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மோடி அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல் திமுகவின்...
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக என் பெற்றோர் என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை என்று ஜீவித் குமார் ஆசிரியை சபரிமாலாவுக்கு பதிலளித்துள்ளார் . தேனி மாவட்டம் ,...
ஆடுமேய்ப்பவரின் மகனான தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 2020 #NEET தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில், அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில்...
நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர்களின் வீடியோ வெளிவந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. அதன் பின் நியூஸ் 18 சேனல் மற்றும் இதர...
2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலுக்காக, இந்திய உணவு நிறுவனம் பிற அரசு முகமைகளுடன் இணைந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், கேரளா...
பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில...
சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு. மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது. இதன் தொடர்ச்சியாக...
