ரேஷன் அட்டைக்கு தலா 1000 ரூபாய் !நடைபாதை வியாபாரிகளுக்கு 2000 ரூபாய் ! முதல்வர் எடப்பாடி அதிரடி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது மார்ச் 31 வரை போடப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்ட தொடரினில் இந்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 144 தடை உத்தரவு இன்று 6 மணி முதல் அமலாக உள்ளதால், பொதுநிவாரண நிதியாக, பொது விநியோக அட்டை தாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது நிவாரண நிதி ரூ.1000 உடன் கூடுதலாக ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 2000 ரூபாயும் கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஓட்டுநர் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1,000 வழங்கப்படும். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.3,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும். எனவும் இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்க இயலாதவர்கள் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதத்தில்வாங்கி கொள்ளலாம் . ரேசன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் தரப்படும். ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று உணவு பொருட்கள் தரப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள பிறமாநில அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகத்தில் சுகாதாரமானமுறையில் உணவு பொருட்கள் சமைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version