Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம்! ஊரடங்கு காலத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது!

Oredesam by Oredesam
July 24, 2020
in இந்தியா, செய்திகள்
0
குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம்! ஊரடங்கு காலத்தில் தீவிரமாக  செயல்படுத்தப்பட்டுள்ளது!
FacebookTwitterWhatsappTelegram

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை எதிர்த்து மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக மூன்று முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், வெளியே வரும்போது பாதுகாப்பான தூர விதிமுறைகள் மற்றும் முகமூடிகளை கட்டாயமாக அணிவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள், திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோவிட் – 19 பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி பரவும் சங்கிலியை தகர்ப்பதே என்பதால், மக்களின் நலனுக்காக இந்தக் கட்டுப்பாடுகள் செய்யப்படுகின்றன. காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகவர்கள், மக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வெளியே வருவதைத் தடுப்பதிலும், சந்தை இடங்களின் கூட்டத்தைத் தடுப்பதிலும் மும்முரமாக உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் பலரின் கவனத்திற்கு வராமல் போகும் வாய்ப்பிருப்பதால், சிலரால் குழந்தைத் திருமணங்களை நடத்த தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் – PCMA குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது, பாதுகாப்பது மற்றும் வழக்குத் தொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்வது சட்டவிரோதமானது. குழந்தைகளுக்கிடையில் எந்தவொரு திருமணமும் சட்டவிரோதமானது என்று கருதப்படுகிறது. இந்தத் திருமண ஒப்பந்தத்தை மேற்கொண்ட இருவரும் குழந்தைத் திருமணத்தை இரண்டாண்டுகளுக்குள் ரத்து செய்யலாம். அத்தகைய மனு சிறுமியான பெண் அல்லது பையனால் மட்டுமே செய்யப்படும். குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்திய குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை அல்லது  ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும். சட்டத்தின் 11 வது பிரிவின்படி, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அனுமதிக்கும் நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்களுக்கும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைத் திருமணத்தை தடுக்க விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். திருச்சிராப்பள்ளியில், ஊரடங்கு காலத்தில் 74 குழந்தைத் திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடுமையான எச்சரிக்கையை வழங்க அதிகாரிகளைத் தூண்டியுள்ளது. 74 குழந்தைத் திருமண வழக்குகளில், 15 திருமணங்கள் நடத்தப்பட்ட பின்னரே பதிவாகியுள்ளன, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

குழந்தைத் திருமணங்களைப் பற்றி அறிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரிடம் புகார் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டணமில்லா உதவி எண் 1098 இல் புகார்களையும் பதிவு செய்யலாம். திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தமிமுனிசா, மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் மற்றும் பெண்கள் மீது அரங்கேறும் வீட்டு வன்முறைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஆர்வலர் திருமதி. சுபத்ரா கூறுகையில், சிறுமிகள் இளம் வயதிலேயே திருமணமாகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியது. அவர்கள் உளவியல் ரீதியாக திருமணத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால், அது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பெண்கள் கல்வியை நிறுத்த வேண்டியிருக்கும், இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

உலகெங்கிலும் 2030க்குள் குழந்தைத் திருமணத்தின் மூலம் நடக்கும் மனித உரிமை மீறலை முடிவுக்குக் கொண்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் நடைபெறும் வீட்டு வன்முறையைத் தடுக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். சமூகத்தில் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்க குழந்தைகள் திருமணத் தடுப்பு அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளின் உதவியை நாடலாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

May 28, 2020
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர்  உயிரிழப்பு!

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

July 9, 2020
ஆவின் பால் அட்டைவேண்டுமா? கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், எல்லா விவரங்களையும் தாங்க! இது தான் விடியல் ஆட்சியா.?

ஆவின் பால் அட்டைவேண்டுமா? கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், எல்லா விவரங்களையும் தாங்க! இது தான் விடியல் ஆட்சியா.?

August 10, 2021
RN RAVI

எல்லாமே ஆளுநரின் செலவு.. ஆளுநர் மாளிகை அளித்த அதிரடி அறிக்கை! மாட்டிக்கொண்ட தயாநிதிமாறன்..

August 25, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x