இந்தியாவில் டூப்ளிகெட் பொருட்கள் தயாரிக்கும் 5 சீன தயாரிப்புகளுக்கு தடை விதித்த மத்திய அரசு !

உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு 5 ஆண்டுகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அலுமினியம் மற்றும் இரசாயனங்கள் அடங்கும். உள்நாட்டு வணிகங்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க, Cheap Material Accumulationசட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) தெரிவித்துள்ளது.

உருளை அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைடு (சாயத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது), சிலிகான் முத்திரை குத்த பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகை பொருள் (சோலார் செல் மற்றும் வெப்ப பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது), ஹைட்ரோஃப்ளூரோகார்பன் (HFC) மற்றும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் கலவை (குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுகிறது) இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநரகம் (டிஜிடிஆர்) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஹிந்துக்களுக்கு எதிராக முதல்வர் சிலுவை யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் HRaja

இந்த பொருட்களை இந்திய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு சீனா ஏற்றுமதி செய்வது தெரியவந்தது. உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜிப்சம் உப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சீனப் பொருட்களுக்கு Cheap Material Accumulationவிதியை முதன்முதலில் பயன்படுத்திய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்-செப்டம்பர் 2021 காலகட்டத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி $12.26 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதிகள் $42.33 பில்லியனாக மொத்தமாக $30.07 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

தகவல்:-கதிர் நியூஸ்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version