சீனாவே குற்றவாளி உறுதிபடுத்தும் ஐந்து கண்கள்.

சீனாவில் உள்ள உஹான் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி என்கிற லேபில் இருந்து தான் கொரானா வைரஸ் வெளி வந்து
ள்ளது என்று Five eyes என்கிற உளவு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

அதென்னப்பா Five eyes என்கிறீர்களா..அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா
கனடா நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளும் இணைந்து ஒரு புலனாய்வு அமைப்பை
வைத்து இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது இ ந்த உளவு அமைப்பு இந்த நாடுகளுக்கு இடையே போர் செய்திகளை நாஜி படை களில் ஊடுருவி உளவு பார்க்க உருவானது. பிறகு அதை அப்படியே வைத்துக்கொண்டார்கள்.

இந்தஅமைப்பில் இருக்கிறவர்கள் இந்த 5 நாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு தெரியாது இந்த அமைப்பை அந்தநாட்டு அரசாங்கங்கள் கேள்வி கேட்க மு
டியாது.இந்த 5 நாடுகளில் உள்ள முக்கிய மானவர்களை கொண்ட ஒரு டீம் இருக்கிறது அதற்கு மட்டுமே ஐந்து கண்கள் அமைப்பு பதில் கூறும்.

சில மாதங்களுக்கு முன் ஈரானில் வை த்து அந்த நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானை ட்ரோன் மூலமாக சுட்டுகொன்றதே அமெரிக்கா அதற்கு யார்
காரணம் இந்த ஐந்து கண்கள் அமைப்பு தான்.பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்டதும் இவர்களால் தான்.

சதாம் உசேனில் சுலைமான் வரை முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த அமைப்பில் உள்ள இஸ்லாமிய உளவாளிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு
கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களை ஐநா சபை கூட கேள்வி கேட்க முடியாது.இந்த அமைப்பை சேர்ந்த உளவாளிகள் மூலமாக மொபைல் உரையாடல் ஒட்டு கேட்டல் எதிராளி களின் கம்யூட்டர்களை ஹேக்கிங் செய்து அதன்மூலமாக மெயில்களை வைத்து உளவு தகவல்களை பரிமாறிக்கொள்வது சேட்டலைட் மூலமாக தகவல் பரிமாற்றம் எ ன்று ஐந்து கண்கள் அமைப்பு படு சீக்ரெட்டாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

இன்னொரு முக்கியமாக விசயம் என்னவென்றால் மோடி பிரதமராக வந்தவுடன் இந்த அமைப்பின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தார். கடைசியில் பார்த்தால் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஐந்து கண்கள் அமைப்பு இந்தியாவையும் எங்களுடன் இணைக்க முடிவு செய்து இரு க்கிறோம் என்றது.

சூப்பர்ல்ல..இன்னும் சில மாதங்களில் இந்த ஐந்தாம் கண்கள் அமைப்பு ஆறாம் கண்களாக இந்தியா மூலமாக உருமாற்றம் அடைய இருக்கிறது. பசிபிக் பெருங்கடலை இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஐந்தாம் கண்களில் இந்தியா இருக்க வேண்டும்.

அதோடு இந்தியாவில் சமீப காலமாக
வெளி நாடுகளில் உள்ள முஸ்லிம் நாடுகளின் மூலமாக தூண்டப்படும் கலவரங்களை உளவு பார்த்து அது இந்திய அரசின் கவனத்திற்கு வர வேண்டும் என்றால் அதற்கு இந்தியா ஐந்தாம் கண்களில்
ஐக்கியமாக வேண்டும்.

இப்படி உலகின் மிக உயர்ந்த உளவு அ மைப்பாக கருதப்படும் ஐந்தாம் கண்கள்
அமைப்பு சீனாவில் உள்ள உஹான் இன் ஸ்டியூட் ஆப் வைராலஜி ஆய்வு கூடத்தில்
இருந்து தான் கொரானா வைரஸ் வெளிவந்தது என்கிற உண்மையை ஐந்தாம்
கண்கள் அமைப்பு அறிக்கை யாக அளித்து இருக்கிறது..

அதோடு சீனா உஹான் லேபில் இருந்து வைரஸ் கிளம்பிய தடயங்களை அழிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அறிக்கையாக ஐந்துநாடுகளின் தலைவர்களு க்கு மட்டுமல்ல ஆறாம் கண்களின் தலை வர்க்கும் வந்துவிட்டது. அதாவது இந்திய பிரதமர் மோடிக்கும் வந்து விட்டது.

அதென்னப்பா.இன்னும் இந்தியா ஐந்தும் கண்கள் அமைப்பில் சேரவே இல்லை அதற்குள் எப்படி வந்து இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.. இப்போதைக்கு இந்த ஐந்து கண்கள் ரிப்போர்ட் வெறும் டேபிள் வெயிட் தான்.

இது எப்பொழுது வெயிட்டாக மாறி சீனாவை அடிக்கும் என்றால் இதை உலக சுகா தார அமைப்பு ஏற்று கொண்டால் தான்.இதை எப்பொழுது உலக சுகாதார அமை
ப்பு ஏற்று கொள்ளும் என்றால் மே 22 ல் உலக சுகாதார அமைப்பின் சேர்மனாக இந்தியா வந்த பிறகு தான்..

அதற்கு பிறகு பாருங்கள் ஆறாம் கண்க ளான இந்தியாவின் ஆட்டத்தினால் சீனாவை உலகநாடுகள் அனைத்தும் கொரா னாவை உருவாக்கி பரவ வைத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் மனித உயிர்களையும் அழித்த குற்றவாளியாக ஏற்றுக் கொண்டு இருக்கும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version