வசூல் வேட்டைக்கு ஒன்றிணைவோம் வா திட்டம் ! தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அதிர்ச்சி தகவல்!

கே.பி.ராமலிங்கம் தி.மு.க.விவசாய அணி செயலாளராக இருந்தவர். நாமக்கல் மாவட்டதில் பெரும் புள்ளி தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். ஸ்டாலின் திமுக தலைமை ஏற்ற பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிரான கருத்தை கே.பி.ராமலிங்கம் தெரிவித்ததால் தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கே.பி.ராமலிங்கம், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், “ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் திமுக முக்கிய மால்களின் ஓனர்கள் பல்வேறு கடை முதலாளிகள் என வசூல் வேட்டை நடத்தியது என குற்றம்சாட்டினார்.

மேலும் கருணாநிதியை போல் கட்சியை வழி நடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின். திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. என்னை போல் பாதிக்கப்பட்டவர் நிறைய பேர் திமுகவில் உள்ளனர் என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். திமுக அடுத்த தேர்தல் வருவதற்குள் பல முக்கிய தலைவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என செய்திகளும்வெளி வருகின்றது.

Exit mobile version