மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

புதுடெல்லி:  பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது ஏற்பட்ட அமளியை காங்கிரஸ் எம்பி ரஜனி அசோக்ராவ் பாட்டீல் செல்போனில் படம் எடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், ரஜினி அசோக்ராவை பட்ஜெட் கூட்ட தொடரின் எஞ்சிய நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

சிறப்புரிமைக் குழு இந்த விஷயத்தை விசாரிக்கும் மற்றும் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பாட்டீல் இடைநீக்கம் செய்யப்படுவார், நாடாளுமன்றத்தின் புனிதத்தைக் காக்கும் வகையில் இந்த விவகாரம் எந்தவொரு வெளி நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படாது என்று தன்கர் கூறினார்.

Exit mobile version