பா.ஜ.க வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி! தமிழகத்தை குறிவைத்த டெல்லி .. அதிரடிகள் ஆரம்பம்!

Vijayadharani, MLA

Vijayadharani, MLA

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர், சட்டசபை காங்கிரஸ் கொறடா அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் விஜயதாரணி, இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுளது. ஏனென்றால் சிட்டிங் எம்.எல்.ஏ பா.ஜ.கவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் திமுக அதிமுக
எம்.எல்.ஏ க்கள்மற்றும் தமிழகத்தில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பா.ஜ.கவில் சேர வாய்ப்பிருக்கிறது.என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதியில் மூன்று முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது விஜயதாரணிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிலே அதிருப்தி ஏற்பட்டது.

ஏனென்றால் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் கூட முதல் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதன் காரணமாக கட்சியின் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அப்போதே பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் பரவியதை தொடர்ந்துதான் மீண்டும் அவரே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதன் பின் கட்சிப் பணிகளில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு கன்னியாகுமாரி எம்.பி.சீட்டுக்கு குறிவைத்து வேலைகளை செய்ய தொடங்கினார். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.சீட் கேட்டார்.ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கட்சியில் வேலை பார்த்தவருக்கு சீட் இல்லை வாரிசுக்கு சீட்டா என மீண்டும் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்துள்ளார், மேலும் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் பதவி தருவார்கள் என எதிர்பார்த்தார் ஆனால் அதும் நடக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியும் செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

இதன்காரணமாக கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதியில் இந்தமுறை எம்.பி சீட் கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் தேசியதலைமையிடம் அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார். இதனை தேசிய காங்கிரஸ் தலைமை நிராகரித்துள்ளது. தி.மு.க வும் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது எம்.பி யாக இருக்கும் விஜய் வசந்திற்கு தான் வழங்க வேண்டும் என கூறிவிட்டார்களாம். அதற்கு காரணம் தேர்தலில் பணம் செலவு செய்வது தான்.அதன் காரணமாக விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படவில்லை மேலும் காங்கிரஸ் கட்சித் தலைமையோடு விஜய் வசந்த் நல்ல நட்போடும் கட்சிக்கு பணம் செலவழித்தும் வருகிறார். தேர்தல் சமயத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கவும் அவர் தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில் தான் பாஜகவில் இணைவது குறித்து அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் பேசி வருவதாக, தகவல்கள் வெளியானது . இதனை காங்கிரஸ் கட்சி மறுத்தது. பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணிக்கு கன்னியாகுமாரி மக்களவை தொகுதியா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் கன்னியாகுமரி, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் விருப்பமான தொகுதியாகும். அவர் அங்கு பலமுறை போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை வெற்றியும் பெற்று இருக்கிறார்.தற்போது வேலைகளையும் துவக்கி விட்டார்.

இந்நிலையில் அவரை விடுத்து வேறு யாருக்கும் சீட்டு வழங்குவது என்பது தற்போது பாஜகவில் இயலாத காரியமாக உள்ளது. விஜயதாரணிக்கு ராஜ்யசபா எம்.பி. அல்லது பெண்கள் நலவாரிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Exit mobile version