கொரோனா எதிரொலியாக, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு – அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு.

எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.

Exit mobile version