சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்!

திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும். அதன் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகளை சிறப்பு வகுப்புகளுக்கு வரச் செய்துள்ளார். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிளஸ் 1 மாணவி புகாரில் திசையன்விளை போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தற்போது தலைமறைவாக உள்ளார்.

தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டையில் செயல்படும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை சில மாதங்களுக்கு முன் மாணவிகள் கூறினர். பள்ளியின் விசாரணை குழுவினர் விசாரித்து உண்மை என சி.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அவர் மீதான நடவடிக்கை குறித்து சி.எஸ்.ஐ., நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை.

தூய யோவான் பி.எட். கல்லூரியில் பேராசிரியையிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பேராசிரியர்கள மற்றும் ஊழியர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு பிறகு சி.எஸ்.ஐ., பள்ளி, கல்லூரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தாலும் காவல்துறை அமைதி காத்து வருகிறது.

மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் குமுறிவருகிறார்கள். இதுவே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருப்பார். ஆனால் இது கிறிஸ்த்துவ பள்ளி என்பதனாலும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி இழக்க கூடாது என்பதற்காகவும் அமைதி காத்து வருகிறார் கனிமொழி.

கனிமொழி மட்டுமல்ல முக்கிய செய்தி, சிறப்பு செய்தி, விரைவு செய்தி,என 24 மணி நேரம் பேசும் தமிழக முன்களப்பணியாளர்களையும் காணவில்லை. இதுவே இந்து பள்ளிகளில் நடந்திருந்தால் அதை அரசு கையகப்படுத்தவேண்டும் என கூறி இருப்பார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் உட்பட இது கிறிஸ்துவ பள்ளி என்பதால் நவதுரங்களை மூடி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version