தமிழக அரசு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். முதலில் மார்ச் 22 தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின் நோயின் தீவிரம் கண்டு இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு,ஒட்டு மொத்த மக்கள் ஒத்துழைப்பு என பல்வேறு நடவடிக்கைகளால் ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சமூக தொற்றாக மாறவில்லை. இதனிடையே கடந்த 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அப்போது வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் எனவும், அதன்பின் நாட்டில் சில தளர்வுகள் இருக்கும். எனவும் அறிவித்தார் முக்கியமாக இந்தியவில் கொரோனவால் அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தனது உரையில் தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை சுமார் 507 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் நாளை முதல் அமலாக உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. இந்த குழுவின் ஆலோசனைகள் முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்கப்படும். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார்.

அதனால், அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version