சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய திரை நட்சத்திரங்களால் சினிமா துறை மேலும் பிளவு ஏற்படும் நிலைக்கு சென்றுள்ளது. புதிய கல்வி கொள்கை 2020 வகுக்கப்பட்டு இந்த ஆண்டு அமல்செய்யப்படுகிறது. இந்த கல்வி கொள்கையில் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூன்றவது மொழி இந்திய மொழிகளில் எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக மற்றும் எதிர்கட்சிகள் தமிழக மக்களிடையே தவறான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்கள் .


இந்தி திணிப்பு என்று. இதை வைத்து அரசியல் பண்ணலாம் என எண்ணி தமிழ் திரைபிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.புதிய கல்விக்கொள்கை என்றால் என்ன என்பது கூட தெரியாமல் பணத்திற்காக திரை பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டு மக்களுக்கு தவறான வழிகாட்டுகின்றார்கள்.

ஹிந்தியை வைத்து மீண்டும் ஒரு அரசியல் களம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக திரைப்பிரபலங்களும் சேர்ந்து கொண்டு ‛ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டை அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் ‛ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளத்தில் டிரண்ட் ஆனது. பதிலுக்கு ‛திமுகவேணாம்போடா என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்த அபி சரணவன், சமூகவலைதளத்தில் ஒரு அருமையான பதிவை போட்டுள்ளார். அந்த நீண்ட பதிவு இதோ…

கடந்த இரு நாட்களாக #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் பிரபலங்களால் பிரபலபடுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டுகாட்டலும்.

ஹிந்தி என்பது ஒரு மொழி… தகவல்களை பரிமாறி கொள்ள இந்தியாவில் அதிகபடியாக பேசப்படும் மொழிகளில் ஒன்று…. நமது தாய்மொழியை தமிழ் நமக்கு உயிர்போல இந்தியை தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு…. ஒரு சில தீவிர ஹிந்தி மொழி பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்தியை திணித்து, நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர்…

ஆனால் ஹிந்தியை படித்த பல ஆயிரகணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிநாடுகளில் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணி செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மொழி மட்டுமல்ல எந்த ஒரு விசயத்தையும் வலுகட்டாயமாக திணித்தால் அல்லது கட்டாயப்படுத்தினால் இயற்கயாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும் என்பது மனிதன் இயல்பு..

நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் ஹிந்தியை கற்காமல் உதாசீனபடுத்தியதால் வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருக்கிறது.

ஹிந்தி கற்பதால் நமது அறிவு மழுங்க போவதில்லை… ஹிந்தி ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுக் கொள்ளவதில் எந்த தவறும் இல்லை. அந்த கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் என பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால் எந்த காலத்திலும் தமிழை திட்டமிட்டு தவிர்த்து அல்லது நீக்கி ஹிந்தியை திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்க கூடாது, அனுமதிக்க முடியாது.

உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மெசின்கள் அறிவிப்பு பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் ஹிந்தியையும், ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழை தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்கு கற்றுத் தரும் அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்… #ஹிந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிந்து கொள்கின்றது இளைய சமுதாயம். எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும், அது நிச்சயம் உதவும்…

ஹிந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் நிறைந்த டி-சர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற எதிர்ப்பு குரல்கள் தமிழ் சினிமாவில் எழத்தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அதிமுக பா.ஜ.க சார்ந்த தயாரிப்பளர்கள் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் நடிகைகளை ஓரம் கட்ட வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது. மேலும் இந்தி தெரிந்து கொண்டு இந்தி தெரியாது போடா என விளம்பரம் படுத்திய நடிகர் நடிகைகள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். எப்போதும் சமுகத்தை பேசும் விஜய் சேதுபதி இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என ஓட்டம் பிடித்துள்ளார். சமுத்திர கனி சசிகுமார் ஆகியோரும் ஒதுங்கிவிட்டர்களாம்.

Exit mobile version