தில்லியில் ISIS பயங்கரவாதி கைது!

இந்திய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்ததுப்பாக்கி சூட்டில் ISIS பயங்கரவாதி  ஒருவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்த இரண்டு அதி நவீன வெடிகுண்டு சாதனங்களை போலீசார்கைப்பற்றினர்.

வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து பயங்கரவாதியிடமிருந்து மீட்கப்பட்ட வெடிகுண்டு களை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பிடிபட்ட ISIS பயங்கரவாதி அபு யூசுப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவன் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. டெல்லியில் கரோல் பாக் மற்றும் தௌலா குவான் இடையே உள்ள ரிட்ஜ் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இவர் பிடிபட்டார். அவர் பிடிபட்டவுடன் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர்.

தில்லி காவல்துறை சிறப்பு ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் விசாரணை நடந்து வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லியில் யூசுப்புக்கு வேறு சில தோழர்களும் உதவி செய்துள்ளதாக போலீசார் நம்புகின்றனர். அவர்களைப் பிடிக்கவும் தலைநகரில் வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

தில்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு இந்த அமைப்பு ஏற்பாடு செய்துகொண்டிருந்ததாகவும்.

அதற்கான ஆயுத சேகரிப்பு நடந்து கொண்டிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கரவாதி பிடிபட்டதன் மூலம் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் டெல்லி நகரில் பரபரப்பாக கட்சி அளிக்கின்றது.

Exit mobile version