வழியனுப்ப தான் கோவை சென்றாரா உதயநிதி! முடிவுக்கு வந்த செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கை! கைவிட்ட திமுக!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா. என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மதிமுக, அதிமுக, அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார். இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி . அதன்பின் திமுகவிற்கு வந்த பின்,அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்ததை விட, அதிக அளவில் விசாரணை நாட்களிலும், சிறையிலும் இருந்துள்ளார்.
மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுபிணையில் விடுவிக்கப்பட்டார்.அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.செ ந்தில் பாலாஜி எதிராக இருந்த போது தேர்தல் பிரச்சாரத்தின்போது கரூரிலேயே ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து பட்டியலிட்டதும் மேலும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் மேலும் அவரை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.இப்படியெல்லாம் செந்தில் பாலாஜி பற்றி வாய் கிழிய பேசிய ஸ்டாலின், திமுகவில் செந்தில்பாலாஜி ஐக்கியமாகிய பிறகு அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்.
2011 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
2015-ம் ஆண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்து செந்தில் பாலாஜியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. பிறகு திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, 2019-ம் ஆண்டு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
2021-ம் ஆண்டு கரூர் தொகுதியில் வெற்றி பெற்று, திமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரானார்.
2023 ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2024 செப்டம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.ஜாமினில் வந்த மறுநாளே மீண்டும் அவர் முன்பு வகித்த துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றார்அவர் மீண்டும் அமைச்சரானதால், முந்தைய வழக்கின் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள், அதனால் விசாரணை பாதிக்கப்படும் என வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறைமுகமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. இறுதியாக, அவருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர்.இதைத் தொடர்ந்து ஏப்ரல் 27, 2025 அன்று தன்னுடைய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி.அதிமுக ஆட்சியில் இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர். அதன் பின் திமுகவிற்கு வந்த பின், பாஜகவால் நேரடியாக குறிவைக்கப்பட்டவர்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் கோவைக்குச் சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியாகின. உதயநிதி கலந்து கொள்கிற விழா என்றதும்விழா ஏற்பாடுகளை நேரடியாக கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி. செய்திருந்தார்ஆனால் திட்டமிட்டபடி 23ஆம் தேதி அந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதை அடிப்படையாக வைத்து உதயநிதிக்கும் செந்தில் பாலாஜிக்கும் உரசல் என்ற பேச்சுகள் ஆரம்பித்தன.இது விழாவின் முந்தைய நாள் தான் செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது
மேலும் கோவை வந்த அமித்ஷாவும் திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே கோவை வந்த போது மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.மேலும் அடிக்கடி அமித்ஷா தமிழகம் வருவதனால் செந்தில் பாலாஜியின் உறவை துண்டிக்க திமுக தயாராகி விட்டதாம்.மேலும் டாஸ்மாக் வழக்கிலும் விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்பதால் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாகியுளது.
இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி கடைசியாக ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு செந்தில் பாலாஜியை வழியனுப்பிவைத்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரம். என்கிறது கரூர் தரப்பு