சென்னையில் பயங்கரம் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை !

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாநகராட்சி 188-வது வார்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது ஒரு செல்போன் அழைப்பு வந்தால் அலுவலகத்தில் இருந்து 10 மீட்டர் தூரம் சென்று சாலை முச்சந்தியில் உள்ள ராமசந்திர தெருவில் நடந்து பேசி கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இவரது அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வத்தை கட்சியினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் செல்வம் ஆதரவாளர்கள் கூடினார்கள். இதையொட்டி பதற்றம் நிலவியதையடுத்து, மடிப்பாக்கம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

சீட் கிடைப்பதில் மோதலா?

செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற போது ஆதரவாளர்கள் வழி விடாமல் கோஷமிட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சாலையில் ஆதரவாளர்கள் கூடியிருந்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் பிராங் டி ரூபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் ‘சீட்’கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனால் மடிப்பாக்கத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Exit mobile version