மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி!

dmk scam

dmk scam

மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி!

சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும் என மதுரை வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி – திமுக நிர்வாகி, பெண் சிலம்பம் மாஸ்டர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு தனது கடை அருகே இருந்த கலைச்செல்வி என்ற பெண் தொழில்ரீதியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தெய்வேந்திரனிடம் இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அடிக்கடி தெய்வேந்திரனிடம் ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். ஆனாலும் தெய்வேந்திரன் கலைச்செல்வியின் பேச்சை முழுமையாக நம்பாத நிலையில் ”திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகியான முகமது ரபி பேசுகிறார்”- எனக் கூறி செல்போன் மூலமாக பேச வைத்துள்ளார். செல்போன பேசிய முகமது ரபியும் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தருந்த முகமது ரபியை நேரில் சந்தித்த தெய்வேந்திரன் ரபியிடம் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார்.

இரிடிய டீல் மீட்டிங்
இதனையடுத்தும் சில நாட்கள் பிறகு மீண்டும் தெய்வேந்திரனை தொடர்பு கொண்டு ரபி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் முகமது ரபிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னையில் இரிடிய டீல் மீட்டிங் இருக்கிறது என கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பிரமாண்டமான தங்குவிடுதியில் தங்கவைத்து, தெய்வேந்திரனிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தங்குவிடுதியில் நடைபெற்ற மீட்டிங்கில் மதுரையில் இருந்து தெய்வேந்திரன் சென்றபோது பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நபர்கள் வந்துள்ளனர். அப்போது மீட்டிங்கில் பேசிய ரபி உள்ளிட்ட சில நபர்கள் மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவரும் இன்னும் சில நாட்களில் மும்பைக்கு சென்று அங்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நைசாக ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளனர்.

நம்பிக்கை மோசடி
அப்போது மதுரையை சேர்ந்த தெய்வேந்திரனிடம் பேசிய கலைச்செல்வி உங்களுக்கான 20 கோடி ரூபாய் பணம் தயாராக உள்ளதால், நீங்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் பணமாக எடுத்து வாருங்கள் என தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.

இதனை நம்பி தெய்வேந்திரன் உடனடியாக 5 லட்சம் ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரபி மற்றும் கலைச்செல்வியிடம் 18லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையிலும் 20கோடிக்கான இரிடிய கலசமோ, பணமோ கொடுக்காத நிலையில், கலைச்செல்வி மற்றும் முகமது ரபியிடம் தெய்வேந்திரன் தான் கொடுத்த 18லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட போது தன்னை இருவரும் தொடர்ந்து செல்போனில் மிரட்டுவதாக கூறி தெய்வேந்திரன் தெற்குவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தெய்வேந்திரனின் புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகியான முகமது ரபி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தெற்குவாசல் சரக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version