தி.மு.க பெண் கவுன்சிலர் ராஜினாமா! மேலிடம் வேலை செய்ய விடமாட்றாங்க! கவுன்சிலர் கணவர் குமுறல்!..

Nellai Councillor

Nellai Councillor

திமுக அரசில் நிர்வாக குளறுபடிகளை சரி செய்ய முடியாத திறனற்ற அரசாக இருக்கிறது. ஒருபக்கம் திமுக கவுன்சிலர்களின் அராஜகம் ஒருபக்கம் திமுகவினர் அராஜகம் என என மக்களை வாட்டி எடுத்துவருகிறது திமுக ஆட்சி. போதை பொருள் கலாச்சாரம் வெடிகுண்டு கலாச்சாரம் ரவுடிகளின் அட்டகாசம் தான் தமிழகத்தில் தற்போது இருக்கிறது. விடியல் என்ற பெயரில் காரிருள் ஆக்கிவிட்டது தி.மு.க.

திருநெல்வேலி மாநகராட்சியில், மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் உள்ளார். மொத்தமுள்ள, 55 கவுன்சிலர்களில் பெரும்பான்மையாக தி.மு.க,வினர் உள்ளனர். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கவுன்சிலர்கள் இடைடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக தலைமை, அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தியது. எனவே மேயர் பதவி தப்பியது மேலும் மேயருக்கு எதிராக போராடிய கவுன்சிலர் கணவர் சுண்ணாம்பு மணியை தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.அதன் பின் பேசியதாவது :

பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது.

ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனக்கு ஒட்டு போட்ட மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.என கணவருடன் தங்களின் மனகுமுறல்களை கொட்டி தீர்த்தார்கள்.

Exit mobile version