பாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள்! திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் !

பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 4529 நபர்கள் பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.அதேபோல மாநிலம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுவர் விளம்பரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா இந்தமுறை தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டதை தி.மு.கவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் பாஜக மகளிரணி கூட்டம் நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள சுவர் பகுதிகளில் பாஜக போஸ்டர் ஒட்டப்பட்டது.மேலும் சின்னங்கள் வரையப்பட்டன.

இதனை அறிந்த திமுகவினர் அந்த இடத்திற்கு சென்று, பாஜக மகளிரணியிரணுடன் பிரச்சனை செய்துள்ளனர். தங்கள் பகுதிக்குள் பிற கட்சியின் போஸ்டர் ஒட்டக்கூடாது என்றும் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், பாஜக கட்சியை சார்ந்த பெண்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, திமுகவினரை அப்பகுதியில் உள்ள இல்லத்தில் அடைத்து வைத்தனர்.பாஜகவினரையும் அப்பகுதியில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கிய நிலையில், தொடர்ந்து வாக்குவாதம் நிலவி வந்தது. மேலும், பெண்களை தாக்கிய திமுகவினர் 5 பேர் முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தான் திமுகவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறும் ஸ்டாலின் தங்கள் கட்சியினரை கட்டுக்குள் வைத்தால் தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியும்!

பாரதப் பிரதமர் பிறந்த நாள் அன்று சென்னை மாநகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பாஜக சுவரொட்டிகள் மட்டுமே ஒட்டப்படுகின்றன. கிராமங்களில் கூட பிரதமர் பிறந்தநாள் நற்பணி விழாக்கள் நடத்தப்பட்டன. பாஜக வளருது திமுக பதறுது என்பதுபோல் பாஜகவின் கட்சியை கண்டு திமுகவினர் அராஜக செயல்கள் தொடங்கிவிட்டன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சம்பவம்தான் இன்றைய நங்கநல்லூர் சம்பவமாகும் !!‌‌!

இதனை தொடர்ந்து திமுக அராஜகத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!

Exit mobile version