காஷ்மீரில் வருகிறது முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ! துப்பாக்கி சத்தம் நின்று பாடல்கள் ஒலிக்கப்போகிறது!

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள். ஜம்மு காஷ்மீர்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு புதிய பாதையில் மிகவும் உற்சாகத்துடன் நடைபோடுகிறது காஷ்மீர். எப்போது துப்பாக்கி சத்தம் நடுவே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தற்போது சினிமா பாடல்கள் கேட்க போகின்றது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் மூன்று மாடி மல்டிபிளெக்ஸ் மால் கொண்டு வரவுள்ளதால், காஷ்மீர்-ல் உள்ள மக்கள் விரைவில் படங்களை பெரிய திரையில் காண முடியும். இது மார்ச் 2021 க்குள் தொடங்கப்பட உள்ளது. கடந்த 1990 களில் பயங்கரவாத குழுக்கள் வழங்கிய கட்டளைகளின் காரணமாக காஷ்மீர்-ல் உள்ள பெரும்பாலான சினிமா அரங்குகள் மூடப்பட்டன.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் பலம் பலவீனமடைந்து உள்ளது, மத்திய மோடி அரசு எடுக்கும் நடவடிக்கையால் விரைவில் தீவிரவாதிகள் இல்லாத நிலைமைக்கு காஷ்மீரில் அமைதி நிலவும்.அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக கூறுகின்றார்கள். மூன்று மாடி மல்டிபிளக்ஸ் ஏற்கனவே படங்களைத் திரையிட அனுமதி பெற்றுள்ளது, இருப்பினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படும் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னரே உரிமம் வழங்கப்படும். மல்டிப்ளெக்ஸில் மூன்று திரையரங்குகள் இருக்கும்.

காஷ்மீருக்கு இதுபோன்ற வசதிகள் தேவை என்று கூறி இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்

Exit mobile version