முதன் முதலில், ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.

ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார்.

“சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள கடிகார கோபுரத்தை மூவர்ணக் கலரில் ஒளிரச் செய்துள்ளோம். புதிய கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்று ஸ்ரீநகர் மேயர் ஜுனைட் மட்டு ட்வீட் செய்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் முக்கியமான பகுதிகளில் லால் சவுக்கு ஒன்றாகும். ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் கூட மூவர்ணக் கொடிக்கு அனுமதி வழங்கப்படாத ஒரு காலம் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிரச் செய்யப்படுவது இதுவே முதல் முறை. லால் சாக்கில் முதன்முதலில் கவனிக்கத்தக்க கொடி ஏற்றல் 1992 ல் செய்யப்பட்டது. 1992 ல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றினர்.

முதன் முதலில், ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version