ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளார். அவருக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு மூண்டது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, கோவை கார் வெடிப்பு சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்தநிலையில் அண்மையில் ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர். என். ரவி-யை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்தனர்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்படவில்லை. 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் எனக் கூறி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர்.

விழாவில் அவர் பேசியதாவது:-

பாஜக மீது ஆம் ஆத்மி பரபரப்பு புகார் லோக் ஆயுக்தா சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். இச்சட்டத்தை யாரும் பலவீனப்படுத்த கூடாது. எந்த வகையிலும் அதற்கு முயற்சிக்க கூடாது. இதனை மீறி லோக் ஆயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அம்மாநில கவர்னர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவு படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் திமுக அரசு செயல்பாட்டில் திருப்தி இல்லாத அரசுக்கு எதிராக அதிரடியாக பேசினார்.

இந்த விழாவில் கேரள சட்ட மந்திரி ராஜீவ் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்த வேண்டும், என்றார்.

Exit mobile version