தொடங்கியதா வாட்டர் வார்… கதறும் பாகிஸ்தான்… எங்களை விட்ருங்க அலறும் நிர்வாகம்.. கனவிலும் எதிர்பாரததை செய்த பாரதம்!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ளது இதற்கிடையே பாக்கிஸ்தானுக்கு செல்லும் ஜீலம் நதி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம், ஏற்பட்டுள்ளது இது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது உரி அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் விடுவித்ததாக பாகிஸ்தான் தற்போது குற்றம்சாட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த திடீர் நடவடிக்கையால் பாகிஸ்தான் மொத்தமாக குழம்பியுள்ளது ஒருபக்கம் தண்ணீர் நிறுத்தம்,மறுபக்கம் நீர் திறப்பு என மொத்தமாக பயத்தில் நடுங்கி வருகிறது பாகிஸ்தான்.ஜம்மு & காஷ்மீரில் பெய்த கனமழையால், ஜெலம் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள ஹட்டியன் பலா மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. ஆற்றின் அருகிலிருந்த மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.இந்த சூழ்நிலையில், இந்தியா உரி அணையிலிருந்து எச்சரிக்கையின்றி தண்ணீர் விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1960-ல் உலக வங்கி வழியால் உருவான இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளும் தண்ணீர் திறப்பதைப் பற்றி முன்னரே தகவல் சொல்ல வேண்டியது கட்டாயம். ஆனால் இப்போது இந்தியா அதைப் பின்பற்றவில்லையென பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. “இது நீர்வழிப் பயங்கரவாதம்” என கடுமையாக விமர்சித்துள்ளனர்.இந்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. சில இந்திய ஊடகங்கள் இது ஒரு சாதாரண அணை செயல்பாடு என்றும், கனமழையால் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் ஹட்டியன் பலா நிர்வாகம் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து, மீட்புப் படைகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. “
பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குஅதிக அளவில் நகர்ந்து வருவதை தடுக்கவே ஜீலம் நதியில் வெள்ளத்தை உருவாக்கி இருக்கலாம்.இதற்கான வாய்ப்புகள் மிக அ திகமாகவே இருக்கின்றன.ஏன்என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமி ப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபராபாத்திற்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கும் இடையில் உள்ள தொலைவுசுமார் 140 கிலோ மீட்டர் தான்.2-3 மணி நேரத்தில் இஸ்லமாபாத்தில் இருந்து முசாபராபாத்திற்கு பாகிஸ்தான் படைகள் வந்து விட முடியும்.
ஆனால் அதிகப்படியான வெள்ளம் இருப்பதால்பாகிஸ்தான் ராணுவம் அதிக அளவில் வர முடியாது. ஏம்ப்பா இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து போர்புரியாதா? என்று நீங்கள் கேட்கலாம்.இந்தியாவின் ஆசை பெரிய போர் அல்ல..பஹல்காம் தா க்குதலுக்கு பதிலடியாக பாகிஸ் தானுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்.
அதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமி ப்பு காஷ்மீரை இந்தியா மீட்கபோகிறது.அதற்கு பிறகு பாகிஸ்தானே சரண்டராகி விடும்.பதிலுக்கு பெரிய அளவில் போருக்கு வராது.வந்தால் அதோ கதி தான்.பாகிஸ்தான் 5 துண்டுகளாகி விடும்.இந்தியா மிகப்பெரிய அளவில்சேதம் இன்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கப்போகிறது அதற்கு தான் இந்த வாட்டர் வார்.. இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போதே பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துவிட்டது. உலக நாடுகள் காப்பாற்றவேண்டும் என மண்டியிட அழுது புலம்ப துவங்கிவிட்டது பாகிஸ்தான்