Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Oredesam by Oredesam
December 2, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்து காஞ்சிபுரத்தில் தாசில்தாரின் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய தேவாலயத்தை 4 வாரத்திற்குள் இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயானம் செல்வதற்கான வழியை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட, 2004ம் ஆண்டில் முயற்சி நடந்தது. கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச் கட்டவில்லை.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

கடந்த 2013ம் ஆண்டில், மீண்டும் சர்ச் கட்ட முயற்சி நடந்தது. உடனடியாக மனு அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் கட்டுமானம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மயானம் என வகுக்கப்பட்ட பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துவ மத போதகர் தரப்பில், ‘எட்டு ஆண்டுகளாக இந்த இடத்தில சர்ச் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சர்ச் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ‘குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை, மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும், தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலிக்கும் போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அனுமதிக்கலாமா. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. இதை, மத போதகர் ஆக்கிரமித்து கட்டட அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட விரோத நடவடிக்கையை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, நான்கு வாரங்களுக்குள் இடிக்க வேண்டும்.

வேறு நிலம் இருந்தால், கட்டுமானம் எழுப்ப அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறியது குறித்து விசாரணை நடத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு இருந்தால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடியல் அரசு வந்ததிலிருந்து இது வரை 153 கோவில்கள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உண்மையா தெரியவில்லை. ஆனால், அமைதிமார்க்க அன்புமார்க்க இடங்கள் ஒன்றில் கூட கைவைக்கவில்லை. ஏனென்றால் இது அவர்களுக்கான ஆட்சி!

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

July 14, 2021
வீட்டில் பெரியவர்கள் உள்ளார்களா ரெடியாக சொல்லுங்க!  சீரடிக்கு சிறப்பு ரயில் ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலா!நம்ம பட்ஜெட்டில்!

வீட்டில் பெரியவர்கள் உள்ளார்களா ரெடியாக சொல்லுங்க! சீரடிக்கு சிறப்பு ரயில் ஏழு நாட்கள் ஆன்மீக சுற்றுலா!நம்ம பட்ஜெட்டில்!

October 19, 2021
துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞரை மீட்ட பா.ஜ.க வின் KT இராகவன்

துபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞரை மீட்ட பா.ஜ.க வின் KT இராகவன்

July 2, 2020

தற்குறி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்” – எச்.ராஜா செருப்படி பதில்!

September 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x