Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Oredesam by Oredesam
December 2, 2021
in செய்திகள், தமிழகம்
0
தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்து காஞ்சிபுரத்தில் தாசில்தாரின் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய தேவாலயத்தை 4 வாரத்திற்குள் இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலுார் கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயானம் செல்வதற்கான வழியை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட, 2004ம் ஆண்டில் முயற்சி நடந்தது. கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச் கட்டவில்லை.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

கடந்த 2013ம் ஆண்டில், மீண்டும் சர்ச் கட்ட முயற்சி நடந்தது. உடனடியாக மனு அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் கட்டுமானம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மயானம் என வகுக்கப்பட்ட பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துவ மத போதகர் தரப்பில், ‘எட்டு ஆண்டுகளாக இந்த இடத்தில சர்ச் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சர்ச் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது.மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ‘குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை, மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும், தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவை பரிசீலிக்கும் போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அனுமதிக்கலாமா. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம், மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. இதை, மத போதகர் ஆக்கிரமித்து கட்டட அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட விரோத நடவடிக்கையை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, நான்கு வாரங்களுக்குள் இடிக்க வேண்டும்.

வேறு நிலம் இருந்தால், கட்டுமானம் எழுப்ப அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறியது குறித்து விசாரணை நடத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு இருந்தால், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடியல் அரசு வந்ததிலிருந்து இது வரை 153 கோவில்கள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உண்மையா தெரியவில்லை. ஆனால், அமைதிமார்க்க அன்புமார்க்க இடங்கள் ஒன்றில் கூட கைவைக்கவில்லை. ஏனென்றால் இது அவர்களுக்கான ஆட்சி!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை கைகட்டி வேடிக்கை பார்த்த கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள் !

சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை கைகட்டி வேடிக்கை பார்த்த கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள் !

December 18, 2021
#PahalgamTerroristAttack

பாகிஸ்தானுக்கு உலக வங்கி வார்னிங்.. நாடே காணாமல் போகும்… மூடிக்கொண்டு இருந்தால் நல்லது… வர்னிங் அச்சத்தில் பாகிஸ்தான்..

April 27, 2025
தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

March 26, 2024
தி.மு.க எம்.எல்.ஏ ஏற்றிய தேசிய கொடி அறுந்து கீழே விழுந்தது! அருகில் இருந்தவரை அடிக்கப்பாய்ந்த எம்.எல்.ஏ!

தி.மு.க எம்.எல்.ஏ ஏற்றிய தேசிய கொடி அறுந்து கீழே விழுந்தது! அருகில் இருந்தவரை அடிக்கப்பாய்ந்த எம்.எல்.ஏ!

August 15, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x