இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை ஆ.ராசா நிறுத்தி கொள்ள வேண்டும், அவருக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நல்லதல்ல-பொன்.ராதாகிருஷ்ணண்

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க நிர்வாகி தாயார் மறைவையொட்டி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது ;

ஆ.ராசா இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும், அவருக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நல்லதல்ல , தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல என குற்றம் சாற்றிய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த மத்திய அரசிறக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என‌ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் கள்ளக்குறிச்சி செய்தியாளர்கள் சந்திப்பில்‌ தெரிவித்துள்ளார்.

Exit mobile version