NEWS INDEX

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.

021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது.   2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன. 2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும். உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும். முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடக்கம்

ஐஐடி மெட்ராஸில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடக்கம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோருக்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இவை பல்வேறு பாடங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடும் சவால்மிக்க போட்டித் தேர்வுகளாகும். ‘அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர்’  என்ற இப்பிரிவிற்கு 2025-26 கல்வியாண்டு முதல் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) கட்டமைப்புக்குள் வராமல் மாணவர் சேர்க்கை நடைபெறும். விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை மற்றும் நுண்கலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறப்பு மாணவர் சேர்க்கை ஆகியவற்றைப் போன்று ‘அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு’ (ScOpE) மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது உள்ளிட்ட இதர தகுதி அளவுகோள்கள் அந்தந்த ஆண்டிற்கான ஜேஇஇ (அட்வான்ஸ்ட்)-க்கு இருப்பதைப் போன்றே இருக்கும். விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டுகளில் எந்தவொரு ஐஐடி-யிலும் மாணவராக சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. முதல் பேட்ச்-க்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3, 2025 முதல் தொடங்கும். அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டல்கள், அலுவல் விதிமுறைகள் பின்வரும் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. - https://ugadmissions.iitm.ac.in/scope   அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி,  “உலகின் மிகப் பெரிய புதிர்கள் பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை. மாறாக அவற்றை துண்டுதுண்டாகப் பிரித்து, எதிர்கால சந்ததியினருக்கு புதிய அதிசயங்களை உருவாக்கத் துணிபவர்களால்தான் தீர்க்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தோடு, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பெரிதும் விரும்பும் இளநிலைப் படிப்புகளில் சேர்க்கையை வழங்குவதன் மூலம் ஐஐடி மெட்ராஸ் புதியதொரு பயணத்தைத் தொடங்குகிறது” எனக்குறிப்பிட்டார்.

Annamalai

பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள் கேட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.

திராவிட முன்னேற்ற கழகத்தினர் நேர்மையற்ற,நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி...

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

அமலாக்க துறையின் லிஸ்டில் உள்ளது அடுத்தடுத்து யார்.. அமித் ஷா சொன்ன அமைச்சர்கள்… அலறும் அறிவாலயம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில், கரூர்...

AnnamalaiVsStalin

திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது… வளையல் வீடியோ காட்டு தீயாக பரவல்… மொத்த மனமும் போச்சு குமாரு…

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு குறித்த பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. போதையால்...

Page 55 of 924 1 54 55 56 924

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x